'சொதப்பிய முதல் பிளான்'... 'பெட் ரூமில் பாம்பை வைத்த கணவன்'... 'அசந்து தூங்கிய மனைவிக்கு நடந்த கொடூரம்'... இந்தியாவையே உலுக்கிய வழக்கில் அதிரடி திருப்பம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கேரளாவில் படுக்கை அறையில் பாம்பை வைத்து, கொடூரமாக மனைவியைக் கொன்ற கணவனின் செயல் இந்தியாவையே அதிரச் செய்தது. தற்போது இந்த வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

'சொதப்பிய முதல் பிளான்'... 'பெட் ரூமில் பாம்பை வைத்த கணவன்'... 'அசந்து தூங்கிய மனைவிக்கு நடந்த கொடூரம்'... இந்தியாவையே உலுக்கிய வழக்கில் அதிரடி திருப்பம்!

கேரள மாநிலம் பத்தனம்திட்டை மாவட்டம் அடூரை சேர்ந்தவர் சூரஜ். இவருடைய மனைவி உத்ரா. இவர் கடந்த மார்ச் மாதம் 2-ந் தேதி தனது கணவருடன் வீட்டில் தங்கியிருந்த போது பாம்பு கடித்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் உயிர் தப்பினார். இந்த சூழ்நிலையில் கடந்த மே மாதம் 7-ந் தேதி கொல்லம் மாவட்டம் அஞ்சலில் உள்ள தனது தாய் வீட்டில் தங்கி இருந்த போது 2-வது முறையாக அவரை பாம்பு கடித்தது. ஆனால் இந்த முறை உத்ரா பரிதாபமாக உயிரிழந்தார்.

ஏற்கனவே உத்ராவை பாம்பு கடித்து அவர் உயிர் பிழைத்த நிலையில், மீண்டும் அவரை பாம்பு கடித்தது உத்ராவின் பெற்றோருக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது. அதிலும் குறிப்பாக உத்ராவின் கணவர் சூரஜ் சம்பவம் நடந்த சமயம் வீட்டில் இருந்துள்ளார். இதுவும் பெற்றோருக்கு பெரும் சந்தேகத்தைக் கொடுத்தது. இதைத் தொடர்ந்து அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டார்கள். அப்போது நகை, சொத்துக்கு ஆசைப்பட்டு உத்ராவின் கணவர் தான் விஷ பாம்பை ஏவி கொலை செய்த திடுக்கிடும் தகவல் வெளியானது. மேலும் இருவருக்கும் ஒரு குழந்தை இருக்கும் நிலையில், சூரஜ்க்கு வேறொரு பெண்ணுடன் தகாத உறவு இருந்து வந்ததும் தெரியவந்தது.

போலீசாரின் விசாரணையில் சூரஜ் அளித்த வாக்குமூலம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதில், ''உத்ராவிடம் 100 பவுன் நகை இருந்துள்ளது. அதில் சில நகைகளை விற்று சூரஜ் ஊதாரித் தனமாகத் தனது ரகசிய காதலியுடன் சுற்றி வந்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்குள் அவ்வப்போது சண்டை ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் மனைவியைக் கொலை செய்து விட்டுத் தான் சந்தோசமாக இருக்க சூரஜ் திட்டமிட்டுள்ளார். அதே நேரத்தில் இது கொலை போன்று தெரியக் கூடாது என்பதில் உறுதியாக இருந்த சூரஜ், பாம்பை வைத்து மனைவியைக் கொலை செய்யத் திட்டம் போட்டார்.

சம்பவத்தன்று உத்ரா தனது தாய் வீட்டில் தங்கியிருந்த போது, சூரஜ் பாம்பாட்டியிடம் இருந்து ஒரு நல்ல பாம்பை விலைக்கு வாங்கி உத்ராவின் வீட்டுக்குக் கொண்டு சென்றார். அங்கு இரவு உத்ராவுடன் தங்கினார். அப்போது, தூக்க மாத்திரை கொடுத்துத் தூங்க வைத்து விட்டு அவர் மீது பாம்பை ஏவிக் கடிக்கச் செய்தார். இதில் உடலில் விஷம் ஏறிய நிலையில் உத்ரா பரிதாபமாக இறந்தார். ஏற்கனவே தூக்க மாத்திரை சாப்பிட்டதால் துக்கத்திலேயே உத்ரா பரிதாபமாக உயிரிழந்தார். ஆனால் காவல்துறையினரின் விசாரணையில் சூரஜ் சிக்கிக் கொண்டார். கொலை சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த சூரஜின் தந்தை சுரேந்திரன், பாம்பாட்டி சுரேஷ் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

Kerala Snakebite Murder Case : Sooraj's mother and sister arrested

விசாரணை தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது புதிய திருப்பமாக இந்த கொலைக்கு சூரஜின் தாயார் ரேணுகா, தங்கை சூர்யா ஆகியோரும் உடந்தையாக இருந்ததாக விசாரணையில் தெரியவந்தது. கொலை நடந்ததும் ஆதாரங்களை அழித்த அவர்கள் உத்ராவின் நகைகளை அபகரித்து வீட்டின் பின் பகுதியில் புதைத்து வைத்துள்ளனர். அவர்களிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்திய போது, மறைத்து வைத்திருந்த நகையை எடுத்துக் கொடுத்தனர். இதையடுத்து ரேணுகா, சூர்யா ஆகியோரை போலீசார் கைது செய்து அவர்கள் மீது, கொலை நடந்ததற்கான ஆதாரத்தை அழித்தது மற்றும் வன்கொடுமை செய்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

நகைக்கு ஆசைப்பட்டு வீட்டிற்கு வாழ வந்த பெண்ணை மொத்த குடும்பமும் சேர்ந்து கொலை செய்துள்ள சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்