‘தயாராகிவிடுங்கள்’!.. முதல் கொரோனா தடுப்பூசி செலுத்திய பின் ‘கமல்ஹாசன்’ அதிரடி டுவீட்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.

‘தயாராகிவிடுங்கள்’!.. முதல் கொரோனா தடுப்பூசி செலுத்திய பின் ‘கமல்ஹாசன்’ அதிரடி டுவீட்..!

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் கடந்த ஜனவரி 16-ம் தேதி தொடங்கியது. கொரோனா தடுப்பூசி குறித்து மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் அரசியல் கட்சி தலைவர்கள் கொரோனா தடுப்பூசியை செலுத்தி வருகின்றனர். நேற்று டெல்லி எம்ஸ் மருத்துவமனையில் பிரதமர் மோடி கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்று சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.

அதில், ‘ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டேன். தன் மேல் மாத்திரமல்ல, பிறர் மேல் அக்கறையுள்ளவர்களும் போட்டுக்கொள்ள வேண்டும். உடல் நோய்த் தடுப்பூசி உடனடியாக, ஊழல் நோய்த் தடுப்பூசி அடுத்த மாதம். தயாராகிவிடுங்கள்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்