'நடு ராத்திரி மயானத்தில் கேட்ட அலறல் சத்தம்'... 'எரிந்த நிலையில் கிடந்த 'ஸ்மார்ட் போன்'... அதிரவைக்கும் மர்மம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ள்ளக்குறிச்சியில் மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது மேலும் சில மர்மங்கள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'நடு ராத்திரி மயானத்தில் கேட்ட அலறல் சத்தம்'... 'எரிந்த நிலையில் கிடந்த 'ஸ்மார்ட் போன்'... அதிரவைக்கும் மர்மம்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை‌ அருகேயுள்ள மேட்டுநன்‌னாவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். விவசாயியான இவரது மூத்த மகள் நித்ய ஸ்ரீ நர்ஸிங் படித்து வந்தார். இந்த சூழ்நிலையில் அவர் திடீரென தற்கொலை செய்து கொண்டார். வீட்டில் ஒரே ஸ்மார்ட் ஃபோன் மட்டும் இருப்பதாக கூறப்படும் நிலையில் மாணவிக்கும், அவரது இரு சகோதரிகளுக்கும் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்பதில் ஏற்பட்ட பிரச்சனையே தற்கொலைக்குக் காரணம் என மாணவியின் உறவினர்கள் தெரிவித்தார்கள். அதனைத்தொடர்ந்து கிராமத்தில் உள்ள மயானத்தில் மாணவியின் உடல் எரியூட்டப்பட்டது.

இதற்கிடையே மாணவி எரியூட்டப்பட்ட இடத்தில் தற்போது கூடுதல் மனித எலும்புகள், கைக்கடிகாரம், செல்போன் உதிரி பாகங்கள் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். பின்னர் அங்கு கிடந்த எலும்புகளை தடயவியல் நிபுணர்கள் ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர். இது ஒரு புறம் இருக்க,  மேட்டாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவர் தனது மகன் ராமுவை காணவில்லை என அண்மையில் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

Kallakurichi Nursing student's suicide, new mysterious coming out

காணாமல் போன இளைஞர், தற்கொலை செய்துகொண்ட மாணவி நித்யஸ்ரீயை ஒருதலையாகக் காதலித்து வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து தெரிவித்துள்ள போலீசார், ''தற்கொலை செய்துகொண்ட மாணவியின் உடல் எரியூட்டப்பட்ட நாளன்று இரவில் இடுகாட்டு பகுதியில் ராமு சுற்றி வந்துள்ளார். பின்னர் காரியம் முடிந்து அனைவரும் சென்ற நிலையில், நள்ளிரவில் இளைஞர் ஒருவரின் அலறல் சத்தம் கேட்டதாக அந்த பகுதி மக்கள் போலீசாரிடம் கூறியுள்ளார்கள்.

ஒரு தலையாக மாணவி நித்ய ஸ்ரீயை ராமு காதலித்து வந்தாலும் அவரின் இறப்பை ஏற்க முடியாமல் மாணவி உடல் எரிந்துகொண்டிருக்கும் போதே அதில் பாய்ந்து இளைஞர் ராமு உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அதேநேரத்தில் மாணவியின் வீட்டில் நான்கு ஸ்மார்ட்ஃபோன்கள் இருக்கிறது. அப்படி இருக்கச் சகோதரிகள் ஸ்மார்ட்ஃபோனை தரவில்லை என்ற காரணத்திற்காக அவர் தற்கொலை செய்து கொண்டார் என காரணமும் சந்தேகத்தை வரவழைத்துள்ளது. எனவே முழுமையான விசாரணை முடிந்த பின்னரே இந்த வழக்கில் அனைத்து மர்ம முடிச்சுகளும் அவிழும்'' என போலீசார் கூறியுள்ளார்கள்.

மற்ற செய்திகள்