“எதுக்கு பிரேயர் பண்ற? உன் பையனே செத்துட்டானு அம்மாகிட்ட சொன்னப்ப!”.. “பெனிக்ஸ் வளர்த்த நாய் இன்னும் மீளல”.. உருக்கும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சாத்தான்குளத்தில் காவலர்கள் தாக்கியதால் உயிரிழந்த வியாபாரிகள் விவகாரத்தில் சம்மந்தப்பட்ட போலீஸார் கைதாகியுள்ளனர். கொலைவழக்காக இவ்வழக்கை சிபிசிஐடியினர் பதிவு செய்துள்ளனர்.

“எதுக்கு பிரேயர் பண்ற? உன் பையனே செத்துட்டானு அம்மாகிட்ட சொன்னப்ப!”.. “பெனிக்ஸ் வளர்த்த நாய் இன்னும் மீளல”.. உருக்கும் வீடியோ!

சாத்தான் குளம் போலீஸ் நிலையத்தில் போலீஸார் தனது தந்தை மற்றும் சகோதரரை,  விசாரணையின்  பேரால் அடித்தது முதல் அந்த இரவு முழுவதும் கெஞ்சியும் கேட்காமல் அவர்களை விடாமல் தாக்கியதையும், வழக்கறிஞரை உள்ளே விடாததையும், மருத்துவமனையில் எந்த விளக்கமும் அளிக்கப்படாததையும், அந்த நேரத்தில் விஜயவாடாவில் இருந்த தன் நிலை பற்றியும் கூறிய பெனிக்ஸின் சகோதரி, அவர்களின் ஆடைகளில் ரத்தக்கறை இருந்து வரையில் அத்தனையையும் உருக்கத்துடன் பகிர்ந்துள்ளார்.

நல்லா உடல் ஆரோக்கியத்துடன் இருந்தவர்களின் சடலத்தை மட்டுமே பெற முடிந்ததாகவும், பிரேயர் பண்ணிக் கொண்டிருந்த அம்மாவிடம், விஷயம் தெரிந்த சித்தப்பா “எதுக்கு பிரேயர் பண்ற, உன் பையந்தான் போய்ட்டானே” என சொன்னபோதுதான் அம்மாவுக்கு தெரிந்ததாகவும் கூறும் பெனிக்ஸின் சகோதரி, அடுத்த நாள் காலையில் அனைவரும் அம்மாவை கட்டிப் பிடித்து அழுதுகொண்டே “உன் பையன் மட்டும் சாகல” என சொல்லும்போதுதான் அம்மா உட்பட அனைவருக்குமே அப்பா இறந்தது தெரிந்ததாகவும் தெரிவித்துள்ளார். அதன் பிறகு விஜயவாடாவில் இருந்து தான் வரும் வரை தனது குடும்பத்தினர் காத்திருந்ததாகக் கூறும் பெனிக்ஸின் சகோதரி, மேஜிஸ்திரேட்டிடம் அடுத்த நாள் காலை பிரேத பரிசோதனை செய்த பெற்றுக்கொண்டு வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

“தவறு செய்திருந்தால் எச்சரித்திருக்கலாம். இந்த இழப்பு தேவையற்றது. இனி இதுபோன்ற சம்பவம் நடக்காமல் இருக்க தமிழக அரசு நியாயம் செய்வார்கள் என நம்புகிறோம். நீதித்துறைக்கு தெரியும் என்ன தண்டனை கொடுக்கணும் என்று., அதை சீக்கிரமா செய்யணும் என்பதுதான் எங்கள் வேண்டுதல்” என்றும் பெனிக்ஸின் சகோதரி தெரிவித்துள்ளார்.

ஜெயராஜின் வீட்டில் பெனிக்ஸ் வளர்த்த நாய் மிகவும் சோகமாக இருப்பதாகவும், யாரையும் கவனிக்காமல் வாசலின் முன்னால் அமர்ந்துகொண்டு இந்த சோகத்தையும் பிரதிபலிப்பதாய் அமர்ந்துள்ளது. தமிழ்நாட்டையே உலுக்கியுள்ள இந்த இரட்டைக் கொலையின் முகாந்திரமாக காட்சிதரும் பெனிக்ஸ் வளர்த்த நாய் இந்த கோர சம்பவத்தை நினைவுகூறும்படி உள்ளதாக பெனிக்ஸின் சகோதரியின் மைத்துனர் தெரிவிக்கிறார்.

மற்ற செய்திகள்