தமிழகத்தில் ‘தியேட்டர்கள்’ எப்போது திறக்கப்படும்..? அமைச்சர் கடம்பூர் ராஜூ பதில்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் திரையரங்குகள் திறப்பது தொடர்பான கேள்விக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ பதிலளித்துள்ளார்.

தமிழகத்தில் ‘தியேட்டர்கள்’ எப்போது திறக்கப்படும்..? அமைச்சர் கடம்பூர் ராஜூ பதில்..!

திருச்செந்தூர் அருகே பிச்சிவிளையில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் கூடுதல் கட்டடத்தை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார்.

இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘மத்திய அரசு திரையரங்குகளை திறப்பது குறித்து வழுகாட்டு நெறிமுறைகளை தான் வெளியிட்டுள்ளது. எந்த மாநிலத்திலும் திரையரங்குகள் திறக்கப்படவில்லை. மத்திய சுகாதரத்துறை அறிக்கை வெளியிட்டதும் திரையரங்குகளை திறக்கும் முதல் மாநிலமாக தமிழகம் இருக்கும்’ என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்