'6 மாசமா காதலிச்சோம்'... 'ஆனா வீட்டை விட்டு வர இதுதான் காரணம்'... சௌந்தர்யா வெளியிட்ட பரபரப்பு வீடியோ!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் பிரபுவை காதலித்து திருமணம் செய்து கொண்ட விவகாரத்தில் அவரது மனைவி சௌந்தர்யா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

'6 மாசமா காதலிச்சோம்'... 'ஆனா வீட்டை விட்டு வர இதுதான் காரணம்'... சௌந்தர்யா வெளியிட்ட பரபரப்பு வீடியோ!

கள்ளக்குறிச்சி அதிமுக எம்.எல்.ஏ பிரபு திருச்செங்கோட்டில் தனியார் கல்லூரியில் பி.ஏ ஆங்கிலம் 2-ம் ஆண்டு படிக்கும் கல்லூரி மாணவியைப் பிரபு தனது பெற்றோர் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார். இதுகுறித்து, மணப்பெண்ணின் தந்தை சுவாமிநாதன் வெளியிட்ட வீடியோ ஒன்றில், “எனது குடும்பத்தினருடன் பிரபு எம்.எல்.ஏ, மகன் போலப் பழகி வந்தார். ஆனால் சுமார் 20 வயது வித்தியாசமுள்ள எனது மகளை இப்படிக் கடத்திச் செல்வார் என எதிர்பார்க்கவில்லை. நான் சாதி பார்க்கவில்லை. ஆனால் வயது வித்தியாசம் பார்க்க வேண்டுமல்லவா?” என்று பதிவிட்டார்.

I got married with my consent and will, says MLA Prabhu Wife Soundarya

இந்நிலையில் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபுவை முழு சம்மதத்துடன் தான் திருமணம் செய்துகொண்டதாகவும், யாரும் கடத்தவோ, மிரட்டவோ இல்லை என்றும் கூறி பிரபுவின் மனைவி சௌந்தர்யா கூறியுள்ளார். இருவரும் 6 மாதங்களாகக் காதலித்து வந்ததாகவும், இருவரின் காதல் விவகாரம் வீட்டிற்குத் தெரிய வந்ததும், எனது பெற்றோர் திருமணத்திற்குச் சம்மதிக்காத காரணத்தினால் இந்த முடிவிற்கு வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

I got married with my consent and will, says MLA Prabhu Wife Soundarya

இதனிடையே கள்ளக்குறிச்சி அதிமுக எம்.எல்.ஏ பிரபு, சௌந்தர்யாவைக் கடத்திச் சென்று திருமணம் செய்துகொண்டதாகவும், மகளை ஆஜர்படுத்த வேண்டும் என்றும் கூறி அவரது தந்தை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். ஆட்கொணர்வு மனு மீது இன்று விசாரணை நடத்தப்படுமெனச் சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், தம்மை யாரும் மிரட்டவோ, கடத்தவோ இல்லை என்றும் முழு சம்மதத்துடன் தான் எம்.எல்.ஏ பிரபுவை திருமணம் செய்துகொண்டதாகவும் சௌந்தர்யா கூறியுள்ளார்.

 

மற்ற செய்திகள்