வீட்டுக்கு வந்தப்போ போனில் பேசிக் கொண்டிருந்த மனைவி?.. திடீர்ன்னு வெளிய வந்து கணவன் சொன்ன விஷயம்.. திடுக்கிடும் பின்னணி!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மதுராந்தகம் அருகே கழனிபாக்கம் என்னும் கிராமம் அமைந்துள்ளது. அங்கே உள்ள மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரஞ்சித் குமார்.

வீட்டுக்கு வந்தப்போ போனில் பேசிக் கொண்டிருந்த மனைவி?.. திடீர்ன்னு வெளிய வந்து கணவன் சொன்ன விஷயம்.. திடுக்கிடும் பின்னணி!!

Also Read | பாதியில் நின்ன படிப்பு.. உடனே இளைஞர் எடுத்த புது ரூட்.. "ஒரு வருஷத்துல இத்தன கோடி ரூபாய் வருவாயா?"

மதுராந்தகம் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் மேற்பார்வையாளராக அவர் வேலை பார்த்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

இவரது மனைவி பெயர் சுதாமதி. இவர்கள் இருவரும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் ரஞ்சித் குமார் - சுதாமதி தம்பதியினருக்கு இரண்டு மகன்களும் உள்ளனர்.

இதனிடையே, கடந்த சில தினங்களுக்கு முன்பாக துணி அயன் செய்து கொண்டிருந்த தனது மனைவி மின்சாரம் தாக்கி இறந்து போனதாக அக்கம் பக்கத்தினரிடம் ரஞ்சித் குமார் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதற்கு மத்தியில், மனைவியின் உடலையும் அவசர அவசரமாக இறுதி சடங்கு செய்யவும் முயன்றுள்ளார் ரஞ்சித் குமார்.

அப்படி ஒரு சூழலில் தான் சுதாமதி மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் கருதி உள்ளனர். இது தொடர்பாக போலீஸ் நிலையத்திலும் தகவல் தெரிவிக்கப்பட, சம்பவ இடம் வந்த போலீசார் சுதாமதி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்திருந்தனர். அப்போது முதற்கட்ட ஆய்வில் கடும் அதிர்ச்சி தகவல் ஒன்று தெரிய வந்தது.

சுதாமதியின் தலை பகுதியில் பலத்த காயம் ஒன்று இருப்பது தெரிய வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அதே போல, சுதாமதியின் கழுத்திலும் கயிறால் இறுக்கப்பட்ட தடங்கள் இருந்ததும் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, சுதாமதியின் கணவர் ரஞ்சித் குமாரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி இருந்தது.

husband arrested after his wife passed away police enquiry

கடந்த சில தினங்களுக்கு முன்பாக வேலையை முடித்து விட்டு ரஞ்சித் குமார் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது மனைவி சுதாமதி யாருடனோ போனில் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக சந்தேகத்தில் மனைவியிடம் விசாரிக்கத் தொடங்கி உள்ளார் ரஞ்சித் குமார். மேலும், அவர்களுக்கு இடையே வாக்குவாதமும் உருவானதாக தெரிகிறது.

இதனால் கோபம் அடைந்த ரஞ்சித், மனைவியை கொலை செய்ததும் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து கொலையை மறைப்பதற்காக தான் அயன் செய்த போது மின்சாரம் தாக்கி மனைவி உயிரிழந்ததாகவும் நாடகமாடி உடலை அவசரமாக புதைக்கவும் திட்டம் போட்டது விசாரணையில் அம்பலமாகி  உள்ளதாக கூறப்படுகிறது.

Also Read | "பிரியாணி கேட்டதுக்கா இப்படி?".. கோபத்தில் இருந்த கணவர்.. அடுத்த கணமே கேட்ட அலறல் சத்தம்!!.. மிரண்ட அயனாவரம்

HUSBAND, WIFE, ARREST, POLICE

மற்ற செய்திகள்