‘ஒருநாள் கூட...’.. சரவணபவன் அதிபர் மறைவு குறித்து ஜீவஜோதி பேசியது என்ன..?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மறைந்த சரவணபவன் ஓட்டல் அதிபர் ராஜகோபாலின் உடல் அவரது சொந்த ஊரில் நாளை அடக்கம் செய்யப்பட உள்ளது.

‘ஒருநாள் கூட...’.. சரவணபவன் அதிபர் மறைவு குறித்து ஜீவஜோதி பேசியது என்ன..?

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஹோட்டல் சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால் சிகிச்சைப் பலனின்றி நேற்று(18.07.2019) காலமானார்.

ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலைசெய்யப்பட்ட வழக்கில் பிரபல ஹோட்டல் சரவணபவன் ராஜகோபாலுக்கு கடந்த 2004 ஆம் ஆண்டு பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் 10 ஆண்டு சிறைத் தண்டனையும் 55 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.

இதனை அடுத்து ஜாமீனில் வெளிவந்த ராஜகோபால் இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முற்பட்டார். இதனிடையே இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. சுமார் 20 ஆண்டுகள் கழித்து இந்த தண்டனை மீண்டும் அண்மையில் உறுதி செய்யப்பட்டது.

ஆனால் தீர்ப்பளிக்கப்பட்ட இந்த வழக்கில் நீடித்த இழுபறியைத் தாண்டி ஜூலை 7-ஆம் தேதிக்குள் ராஜகோபால் சரணடைய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், தான் சரணடைவதற்கான காலநீட்டிப்பு அவகாசத்தை தரவேண்டும் என்று தனது உடல்நிலையை காரணம் காட்டி ராஜகோபால் தரப்பில் மனு அளிக்கப்பட்டது. ஆனால் உச்சநீதிமன்றமும் ராஜகோபாலுக்கு காலநீட்டிப்பு ஏதும் வழங்க முடியாது என்று சொல்லி உடனடியாக சரணடைய வேண்டும் என்று கட்டளையிட்டது. அதன்படி கடந்த வாரம் உடல்நிலை சரியில்லாத நிலையிலேயே ராஜகோபால் சரணடைந்ததில் இருந்தே உடல்நிலை மோசமாக இருந்தது. இதற்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை மேற்கொண்டு வந்த நிலையில் நேற்று காலை திடீரென சிகிச்சை பலனின்றி ராஜகோபால் உயிரிழந்தார்.

இவரது உடல் அவரின் சொந்த ஊரான திருச்செந்தூர் அருகே உள்ள வனத்திருப்பதியில் நாளை அடக்கம் செய்யப்பட உள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கொலை குற்ற வழக்கில் கைதான ராஜகோபால் ஒருநாள் கூட சிறை தண்டனை பெறாமல் உயிரிழந்தது தனக்கு வருத்தம் அளிப்பதாக ஜீவஜோதி தெரிவித்துள்ளார்.

RAJAGOPAL, SARAVANABHAVAN, CHENNAI, DIES