'சாலையோரம் கிடந்தது தங்க துகள்களா...?' 'அலையலையாக குவிந்த பொதுமக்கள்...' - உச்சக்கட்ட பரபரப்பு...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே இருக்கும் பாகலூர் மற்றும் சர்ஜாபுர சாலையில் தீடீரென குவிந்த பொதுமக்களின் கூட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

'சாலையோரம் கிடந்தது தங்க துகள்களா...?' 'அலையலையாக குவிந்த பொதுமக்கள்...' - உச்சக்கட்ட பரபரப்பு...!

பாகலூர் மற்றும் சர்ஜாபுர சாலையோரம் தங்கத் துகள்கள் கொட்டிக் கிடக்கிறது என்ற செய்தி சுற்றுவட்டார மக்களுக்கு பரவியத்தின் தொடர்ச்சியாக, அப்பகுதி பொதுமக்கள் சாலைகளில் குவிந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

மேலும் தங்கத்தை தேடத்தொடங்கிய அப்பகுதி மக்களுக்கு தங்க துகள்கள் கிடைத்ததா என்பது சந்தேகமே, மேலும் நிஜமாகவே தங்க துகள்கள் இருக்கிறதா அல்லது யாராவது கிளப்பிவிட்ட புரளியா, தங்க துகள்கள் இருக்கிறது என்றால் எப்படி வந்தது என்பது குறித்தான தகவல்களும் ஆராயப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்