'அள்ள அள்ளக் குறையாத பணம்'!.. ரூ.600 கோடி மோசடி புகார்!.. 'ஹெலிகாப்டர் பிரதர்ஸ்' போலீஸ் வலையில் விழுந்தது எப்படி?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நிதி நிறுவனம் மூலம் பல கோடி ரூபாய் மோசடி செய்த ஹெலிகாப்டர் பிரதர்ஸ் கைது செய்யப்பட்ட பின்னணியில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

'அள்ள அள்ளக் குறையாத பணம்'!.. ரூ.600 கோடி மோசடி புகார்!.. 'ஹெலிகாப்டர் பிரதர்ஸ்' போலீஸ் வலையில் விழுந்தது எப்படி?

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ஸ்ரீநகர் காலனி தீட்சிதர் தோட்டம் பகுதியை சேர்ந்தவர்கள் எம்.ஆர்.கணேஷ் - எம்.ஆர்.சுவாமிநாதன். சகோதரர்களான இவர்கள் இருவரும் தொழிலதிபர்கள்.

இவர்கள் கும்பகோணத்தில் நிதி நிறுவனமும், கும்பகோணத்தை அடுத்த கொற்கை கிராமத்தில் பால் பண்ணையும் வைத்து நடத்தி வந்தனர். மேலும், வெளிநாடுகளிலும் பல்வேறு தொழில்கள் செய்து வருவதாக கூறப்படுகிறது.

இவர்கள் சொந்தமாக ஒரு ஹெலிகாப்டர் தளம் அமைத்து ஹெலிகாப்டர் ஒன்றை வைத்திருப்பதால், `ஹெலிகாப்டர் சகோதரர்கள்' என இந்தப் பகுதி மக்களால் குறிப்பிடப்படுகின்றனர்.

இந்த நிலையில், சகோதரர்கள் இருவரும் தங்களுக்கு சொந்தமான நிதி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தால் ஒரு ஆண்டில் இரட்டிப்பாக பணம் திருப்பி அளிக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டனர். இதன் காரணமாக, கும்பகோணம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த செல்வந்தர்கள், வியாபாரிகள், பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் பணம் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

இதற்காக இவர்கள், ஏஜெண்ட்டுகளை நியமித்து அவர்களுக்கு தனி கமிஷன் கொடுத்து வந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிதி நிறுவனத்தில் பலரும் கோடிக்கணக்கில் பணம் செலுத்திய நிலையில் கொரோனா ஊரடங்கை காரணம் காட்டி கணேஷ் - சுவாமிநாதன் சகோதரர்கள், தங்களது நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தவர்களுக்கு முறையாக பணத்தை திருப்பி வழங்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.

இதற்கிடையே தங்களிடம் 15 கோடி ரூபாய் மோசடி செய்ததாக துபாய் தம்பதி அளித்த புகாரின் பேரில் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார்  தலைமறைவான ஹெலிகாப்டர் சகோதரர்களை தேடிவந்தனர்.

இந்த நிலையில், தலைமறைவாக இருந்த ஹெலிகாப்டர் சகோதரர்கள் கணேஷ், சுவாமிநாதன் ஆகியோரை புதுக்கோட்டை வேந்தன்பட்டியில் உள்ள பண்ணை வீட்டில் பதுங்கியிருந்த போது போலீசார் நேற்று கைது செய்துள்ளனர்.

 

மற்ற செய்திகள்