என் மனதில் 'என்றும்' நிற்பாய் மகனே... இதுபோல 'மீண்டும்' நடக்க கூடாது.. பிரபல வீரர்கள் வேதனை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

என் மனதில் என்றும் நிற்பாய் மகனே என சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ஹர்பஜன் சிங் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

என் மனதில் 'என்றும்' நிற்பாய் மகனே... இதுபோல 'மீண்டும்' நடக்க கூடாது.. பிரபல வீரர்கள் வேதனை!

கடந்த வெள்ளிக்கிழமை மாலை 5.40 மணியளவில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 2 வயது குழந்தை சுஜித் 4 நாட்களுக்குப் பின் இன்று அதிகாலை 2.30 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டான்.

உயிரிழந்த சுஜித்தின் உடலுக்கு ஏராளமானோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து கல்லறைத் தோட்டத்தில் இன்று காலை சுஜித் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்தநிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ஹர்பஜன் சிங் சுஜித் குறித்து வேதனை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் என் மனதில் என்றும் நிற்பாய் மகனே என தெரிவித்துள்ளார்.

இதேபோல தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின்,'' உண்மையிலேயே மிகவும் வருத்தமான காலை. இதுபோன்ற நிகழ்வு மீண்டும் நடக்கக் கூடாது,'' என தெரிவித்து உள்ளார்.