'பெற்றோர்களிடையே நிலவிய குழப்பம்'... 'அரையாண்டு தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படுமா'?... அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

அரையாண்டு தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படுமா? என்பது தொடர்பாக நிலவி வந்த குழப்பத்திற்கு அமைச்சர் செங்கோட்டையன் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

'பெற்றோர்களிடையே நிலவிய குழப்பம்'... 'அரையாண்டு தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படுமா'?... அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!

இந்தியாவில் கொரோனா பரவல் தீவிரம் அடைந்ததால் நாடு முழுவதும் பள்ளி-கல்லூரிகளை மூட கடந்த மார்ச் 16-ந்தேதி மத்திய அரசு உத்தரவிட்டது. பின்னர் கொரோனா பரவல் தீவிரமானதையடுத்து மார்ச் 25-ந்தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டதால், இதுவரை பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவில்லை. அதே நேரம் புதிய கல்வியாண்டு தொடங்கியதைத் தொடர்ந்து பல பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகின்றன.

இதனிடையே கடந்த ஜூன் 8-ந்தேதி முதல் ஊரடங்கில் படிப்படியாக பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளி மற்றும் கல்லூரிகள் மட்டும் இன்னும் திறக்கப்படவில்லை. அதே நேரத்தில் அரையாண்டு தேர்வுகளும் நெருங்கி வருவதால் அவை எப்படி நடத்தப்படும் என்பது குறித்தும் பெற்றோர் மத்தியில் குழப்பம் நிலவி வந்தது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளார்.

அதில், ''தமிழகத்தில் பாடத்திட்டங்கள் குறைப்பு குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் நாளை மறுநாள் அறிக்கை வழங்கப்பட இருக்கிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் அறிக்கை தந்த 5 நாளில் பாடத்திட்டங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும். மேலும் அரையாண்டு தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படும் என்ற தகவல் தவறானது'' என விளக்கமளித்துள்ளார்.

மற்ற செய்திகள்