ஆஹா.‌. கை வச்சது குத்தமாயிடுச்சு.. மாப்பிள்ளையை மாற்றிய மணமகள்.‌. கடைசியில் மணமகன் போன இடம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

திருமணத்தின் போது நடனமாடியதற்காக மணப்பெண்ணை அடித்ததால் மணமகனை மாற்றிய விவகாரத்தில் பரபரப்பு திருப்பம் ஏற்பட்டுள்ளது.

ஆஹா.‌. கை வச்சது குத்தமாயிடுச்சு.. மாப்பிள்ளையை மாற்றிய மணமகள்.‌. கடைசியில் மணமகன் போன இடம்..!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த  பெரியகாட்டுபாளையம் ஊரைச்சேர்ந்த ஸ்ரீதருக்கும், பண்ருட்டியை சேர்ந்த ஜெயசந்தியா என்பவருக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் நிச்சயம் செய்து திருமணம் நாள் குறிக்கப்பட்டது. அதன்பேரில் நேற்று காடாம்புலியூரில் உள்ள மண்டபத்தில் டிஜே நிகழ்ச்சிக்கு பெண் விட்டார்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

இதில் பெண் அழைப்பு முடிந்து திருமண மண்டபத்தில் அனைவரும் டிஜே பாடலுக்கு நடனம் ஆடிக்கொண்டிருந்தனர். அப்போது  மணமகள் விட்டார்கள் மணமகன் மற்றும் மணப்பெண்ணை நடனமாட வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் மணமகன் ஆட விருப்பம் இல்லாமல் மேடையில் அமர்ந்துள்ளார்.

Groom slapped Bride for danced on stage marries another guy

அப்போது மணமகள் மற்றும் மணமகளின் உறவினர்கள் சினிமா பாடலுக்கு வெகு நேரமாக நடனமாடியுள்ளனர். அந்த சமயம் உறவினர் ஒருவர் மணப்பெண் மேல் கை வைத்து நடனம் ஆடியதாக சொல்லப்படுகிறது. உடனே மணப்பெண்ணிடம் ஏன் இப்படி செய்கிறாய்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். அப்போது மணமகளும் வாக்குவாதம் செய்ததால அவரை மணமகன் அடித்ததாக சொல்லப்படுகிறது. இதனால் இரு குடும்பங்களிடையே மோதல் ஏற்பட்டு திருமண மண்டபத்தில் இருந்து மணமகள் வெளியேறினார்.

உடனே மணப்பெண்ணுக்கு முறை மாமனுடன் பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் திருக்கோயில் திருமணம் நடைபெற்றது. இதனால் அதிர்ச்சியடைந்த மணமகன் ஸ்ரீதர், பண்ருட்டி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி நிச்சயம் செய்து, திருமண மண்டபத்தில் டிஜே நிகழ்ச்சியில் திருமணத்திற்கு வந்த உறவினர்கள் ஆடிக்கொண்டிருந்தார்கள்.

Groom slapped Bride for danced on stage marries another guy

அப்போது என்னையும் மணமகள் ஜெய்சந்தியாவையும் நடனம் ஆடச் சொல்லி பெண் வீட்டு உறவினர்கள் கட்டாயப்படுத்தி ஆட வைத்தனர். மேலும் பெண் வீட்டு உறவினர் மணப்பெண்ணின் கழுத்தில் கையை வைத்துக் கொண்டு நடனமாடியது எனக்கு மிகவும் வருத்தம் அளித்தது.

Groom slapped Bride for danced on stage marries another guy

ஏன் இதுபோல் நடந்து கொள்கிறாய்? என்று கேட்டதற்கு திருமணத்தை நிறுத்திவிட்டு மணப்பெண்ணுக்கு விருப்பமில்லாமல் அன்றே வேறு ஒரு ஆணுடன் திருமணம் செய்து வைத்துள்ளனர். இதனால் நானும் எனது குடும்பமும், உறவினர்களும் மனவேதனை அடைந்துள்ளோம். நிச்சயதார்த்தம் முதல் திருமணம் வரை எங்களுக்கு ரூபாய் 7 லட்சம் செலவாகியுள்ளது. இதனால் எனது வாழ்க்கை கேள்விக்குறியாகிவிட்டது. அதனால் மணமகள் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மணமகன் ஸ்ரீதர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த சம்பவம் பண்ருட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குளிர்காலம் முடியும் வரை பைக்கை கொஞ்சம் ‘செக்’ பண்ணியே எடுங்க.. ‘ஷாக்’ கொடுத்த சம்பவம்..!

VIDEO: ‘பயப்படாத இந்தா வர்ரேன்’.. மான்குட்டியை காப்பாற்ற நாய் எடுத்த ரிஸ்க்.. நெட்டிசன்களிடம் லைக்ஸை அள்ளிய வீடியோ..!

GROOM, BRIDE, CUDDALORE, GROOM SLAPPED BRIDE FOR DANCING ON STAGE, கடலூர், திருமணம்

மற்ற செய்திகள்