"இவரு எப்படி சமூகத்துக்கு பண்ணுவாரு?".. விக்ரமன் பத்தி மணிகண்டா.. "Open-ஆ எல்லாத்தையும் நான்".. கூடவே சொன்ன ஜிபி முத்து!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.

"இவரு எப்படி சமூகத்துக்கு பண்ணுவாரு?".. விக்ரமன் பத்தி மணிகண்டா.. "Open-ஆ எல்லாத்தையும் நான்".. கூடவே சொன்ன ஜிபி முத்து!!

Also Read | "இப்டி ஒரு கஷ்டம் யாருக்கும் வரக்கூடாது".. விமானியாக இருந்து விபத்தில் உயிரிழந்த கணவர்.. அதே மாதிரி 16 வருஷம் கழிச்சு உயிரிழந்த பெண் விமானி!!

இன்னும் கொஞ்ச நாட்களே மீதம் இருப்பதாக தெரியும் நிலையில், கடந்த வாரம் சிறப்பான வாரமாகவும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அமைந்திருந்தது.

இதற்கு காரணம், முன்பு வீட்டில் இருந்து வெளியேறிய ஏராளமான போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் வருகை தந்துள்ளது தான். ஜிபி முத்து, ராபர்ட், தனலட்சுமி, ராம், மகேஸ்வரி, மணிகண்டா உள்ளிட்ட பலர் வருகையின் காரணமாக மிகவும் கலகலப்பாகவும் பிக் பாஸ் வீடு மாறி இருந்தது.

GP Muthu Manikanta and dhanalakshmi about vikraman

இது தவிர DD, பிரியங்கா, மாகாபா ஆனந்த் உள்ளிட்ட பல பிரபலங்களும் பிக் பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்து வீட்டையே கலகலப்பாக மாற்றியும் வருகின்றனர். அவர்கள் பல பாசிட்டிவ் Vibe-களையும் கொடுத்து விட்டு சென்றுள்ளனர். முன்னதாக, பிக் பாஸ் வீட்டிற்குள் டிடி என்டரி கொடுத்து வலம் வந்த சமயத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டிருந்தது.

இதனிடையே, தற்போது சில ஹவுஸ்மேட்ஸ் இடையே வாக்குவாதங்களும் அரங்கேறி இருந்தது. அதிலும் விக்ரமன் முட்டை கேட்டதன் பெயரில், மகேஸ்வரி, மணிகண்டா, அசிம் மற்றும் விக்ரமன் உள்ளிட்ட போட்டியாளர்களுக்கு மத்தியில் கடும் வாக்குவாதங்கள் அரங்கேறி இருந்தது. கலகலப்பாக சென்று கொண்டிருந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த சண்டை அதிகம் பரபரப்பையும் உண்டு பண்ணி இருந்தது.

GP Muthu Manikanta and dhanalakshmi about vikraman

இதனிடையே, விக்ரமன் குறித்து மணிகண்டா, ஜிபி முத்து, தனலட்சுமி உள்ளிட்டோர் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது பேசும் மணிகண்டா, "விக்ரமன் வந்து சமூகம் பத்தி பேசுறாரு. சமூகத்துக்கு செய்யணும்னு சொல்றாரு. Luxury Budget ல ஒரு 50 பாய்ண்ட் குடுக்க யோசிச்சவரு, எப்படி சமூகத்துக்கு பண்ணுவாரு?. முதல் 4,5 வாரம் அவரு செலவே பண்ணல தெரியுமா?. நான் 50 பாயிண்ட்ஸ் குடுங்கன்னு கேட்டேன்" என்கிறார். இதனைத் தொடர்ந்து, இவ்வளவு நியாயம் பேசும் நபர் வீட்டுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்றும் தனலட்சுமி தெரிவிக்கிறார்.

GP Muthu Manikanta and dhanalakshmi about vikraman

இதன் பின்னர் பேசும் ஜிபி முத்து, "எல்லாத்தையுமே மக்கள் வந்து மனசுல வெச்சுருப்பாங்க. நான் Interview போகல இன்னும். அப்படி போக தொடங்குனா எல்லா பாயிண்ட்டையும் நான் உடைப்பேன். Open- ஆ உடைச்சுருவேன் நான்" என்றும் தெரிவிக்கிறார்.

Also Read | நண்பரின் இறுதி சடங்கில் கலந்துகிட்டு திரும்பிய 3 பேர்.. விமான விபத்தில் சிக்கி எதிர்பாராத விதமாக உயிரிழந்த சோகம்!!

BIGG BOSS, BIGG BOSS 6 TAMIL, BIGG BOSS TAMIL 6, VIJAY TV, VIKRAMAN, DHANALAKSHMI, MANIKANTA, GP MUTHU

மற்ற செய்திகள்