காதலர் கொடுத்த மாத்திரையால்... ஆபத்தான நிலைக்கு சென்ற மாணவி... அதிர்ச்சியடைந்த தாத்தா!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

11-ம் வகுப்பு மாணவியின் கருவை கலைக்க மாத்திரை வாங்கிக் கொடுத்த காதலரான கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காதலர் கொடுத்த மாத்திரையால்... ஆபத்தான நிலைக்கு சென்ற மாணவி... அதிர்ச்சியடைந்த தாத்தா!

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த, வெள்ளக்கல்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளியான மாணிக்கம் என்பவரின் மகன் வசந்த் (21). இவர் அரசு கலைக்கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். கல்லூரி மாணவர் வசந்த் தினமும், கல்லூரிக்கு பேருந்தில் செல்வது வழக்கம். அவ்வாறு செல்லும்போது, காட்டூர் பகுதியை சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் காதலாக மாறியுள்ளது.

இதனால் அவர்கள் அடிக்கடி சந்தித்து வந்துள்ளனர். இதனால் மாணவி கர்ப்பமாகியுள்ளார். இதனை காதலர் வசந்திடம் கூற அவருக்கு கருவை கலைப்பதற்கான மாத்திரையை வாங்கிக் கொடுத்துள்ளார். இதனை சாப்பிட்ட மாணவி உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மாணவி, உயிருக்கு ஆபாத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். 

மாணவி கர்ப்பம் ஆனதும், அந்த கருவை கலைக்க மாத்திரை சாப்பிட்டதும், அதற்கு காரணம் கல்லூரி மாணவர் வசந்த் என்பதும் தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் தாத்தா, மனமுடைந்து போய், நாமகிரிப்பேட்டை போலீசில் புகாரளித்தார். இதன்பேரில் விசாரணை நடத்திய, ராசிபுரம் மகளிர் போலீசார், கல்லூரி மாணவர் வசந்தை போக்சோ சட்டத்தில் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

ABORTION, STUDENT, LOVER, GRANDFATHER