3-வது மாடியில் நின்றபடி 'செல்போன்' பேசிய பள்ளி மாணவி.. 'அஜாக்கிரதை'யால் நிகழ்ந்த சோகம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை அயனாவரத்தில் அடுக்குமாடி குடியிருப்பின் 3-வது மாடியில் செல்போன் பேசிக் கொண்டிருந்த மாணவி, நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

3-வது மாடியில் நின்றபடி 'செல்போன்' பேசிய பள்ளி மாணவி.. 'அஜாக்கிரதை'யால் நிகழ்ந்த சோகம்!

சென்னை அயனாவரத்தில் வடக்கு மாட வீதியில் அடுக்குமாடி குடியிருப்பில், ராம் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவரது 16 வயதான மகள் தீபிகா,  நேற்று தனது வீட்டு மாடியில் இருந்து இரவு செல்போனில் பேசியுள்ளார்.

அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் அடிப்பட்டு படுகாயம் அடைந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த மாணவியை பெற்றோர் உதவியுடன், கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இதனை அயனாவரம் K2 காவல் நிலையத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
செல்போனில் பேசிய போது அந்த மாணவி தீபீகா நிலை தடுமாறி தான் விழுந்தாரா?அல்லது வேறு ஏதும் பிரச்சனையா? என்று பலவிதமான கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

FELLDOWN, SKIDDED, STUDENT