'2 கோடி ரூபாய் வைரம்'.. ஆனா பயன்படுத்தியதோ பழைய 'ட்ரிக்!'.. 'இடைத்தரகர்களை நம்பிப் போன சென்னை நபருக்கு நேர்ந்த பரிதாபம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே மிளகாய்பொடி தூவி, கத்தியை காட்டி 2 கோடி ரூபாய் மதிப்புள்ள வைர நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.

'2 கோடி ரூபாய் வைரம்'.. ஆனா பயன்படுத்தியதோ பழைய 'ட்ரிக்!'.. 'இடைத்தரகர்களை நம்பிப் போன சென்னை நபருக்கு நேர்ந்த பரிதாபம்'!

விழுப்புரம் ஆசாரம்குப்பத்தைச் சேர்ந்தவர் கருணாநிதி. இவர் தனது 2 பூர்வீக வைர மோதிரங்களை விற்பதற்காக சென்னையை சேர்ந்த இடைத்தரகர்களை திண்டிவனம் அருகே கூட்டேரிப்பட்டு பகுதியில், தனது நண்பர் பிரகலாதன் என்பவருடன் சேர்ந்து சந்தித்து நகைகளை காட்டியுள்ளார்.

அங்கிருந்து அவரை பணம் தருவதாகச் சொல்லி தீவனூர் சாலைக்கு அழைத்துச் சென்ற அந்த கும்பல், அவரையும் பிரகலாதனையும் கத்தியைக் காட்டி மிரட்டியதுடன், அவர்களின் கண்களில் மிளகாய்ப்பொடியை தூவிவிட்டு வைர மோதிரங்கள் மற்றும் அவர்கள் அணிந்திருந்த சங்கிலிகளை பறித்துக்கொண்டு தப்பியோடியது.

இதில் தரகர்கள் இருவரையும் கருணாநிதி போலீஸாரிடம் பிடித்து ஒப்படைத்ததை அடுத்து இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்