'செஞ்சி' தொகுதி திமுக எம்.எல்ஏவுக்கு... கொரோனா தொற்று உறுதி...

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

'செஞ்சி' தொகுதி திமுக எம்.எல்ஏவுக்கு... கொரோனா தொற்று உறுதி...

இதுவரை தமிழகத்தில் மட்டும் சுமார் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது செஞ்சி சட்டமன்ற தொகுதி திமுக உறுப்பினரான மஸ்தான் என்பவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன், ரிஷிவந்தியம் தொகுதி எம் எல் ஏ வசந்தம் கார்த்திகேயன், செய்யூர் தொகுதி எம்.எல்.ஏ ஆர்.டி. அரசு ஆகிய 3 திமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா உறுதியாகியிருந்த நிலையில் தற்போது நான்காவது திமுக எம்.எல்.ஏவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதில், சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்