'பெத்த 'அப்பனே' இப்படி பண்ணலாமா?"... உடம்பு சரியில்லன்னு 14 வயசு 'பொண்ண' ஆஸ்பித்திரியில சேர்த்தப்போ... நெஞ்சை பதைபதைக்கும் 'கோரம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மயிலாடுதுறை அருகே செம்பனார்கோவிலை அடுத்த ஆக்கூர் என்னும் பகுதியை சேர்ந்த 9 - ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், அந்த பெண்ணை மயிலாடுதுறையில் அமைந்துள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

'பெத்த 'அப்பனே' இப்படி பண்ணலாமா?"... உடம்பு சரியில்லன்னு 14 வயசு 'பொண்ண' ஆஸ்பித்திரியில சேர்த்தப்போ... நெஞ்சை பதைபதைக்கும் 'கோரம்'!

அப்போது அவருக்கு நடந்த பரிசோதனையில் சிறுமி இரண்டு மாதம் கர்ப்பமாக இருந்த தகவல் வெளிவந்தது. உடனடியாக இதுகுறித்து போலீசாருக்கு இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், மருத்துவமனை விரைந்த போலீசார் விசாரணையை மேற்கொண்டனர்.  விசாரணையில், ஒன்பதாம் வகுப்பு மாணவி கர்ப்பமானதற்கு அந்த சிறுமியின் தந்தையே காரணம் என்றும், சிறுமியுடன் தகாத உறவில் தந்தை ஈடுபட்ட அதிர்ச்சி பின்னணி வெளியானது.

இதன் அடிப்படையில் போலீசார் அந்த சிறுமியின் தந்தையை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். சிறுமியின் தந்தையே தனது மகளிடம் தவறாக நடந்து அந்த பெண்ணை கர்ப்பமாக்கிய தகவல் பேரதிர்ச்சியை அப்பகுதி மக்களிடையே உருவாக்கியுள்ளது. அந்த சிறுமி தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்