“இன்னும் எத்தனை குழந்தைங்கள பலி கொடுத்தாரோ!”.. தமிழகத்தை உலுக்கிய கந்தர்வக் கோட்டை சிறுமி நரபலி விவகாரம்! சிறுமியின் தந்தைக்கு ஆலோசனை கொடுத்த பெண் மந்திரவாதி கைது!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

13 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக் கோட்டையைச் சேர்ந்த சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

“இன்னும் எத்தனை குழந்தைங்கள பலி கொடுத்தாரோ!”.. தமிழகத்தை உலுக்கிய கந்தர்வக் கோட்டை சிறுமி நரபலி விவகாரம்! சிறுமியின் தந்தைக்கு ஆலோசனை கொடுத்த பெண் மந்திரவாதி கைது!

கடந்த மாதம் 18-ஆம் தேதி  புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக் கோட்டை அருகே, பன்னீர் செல்வம் என்கிறவரின் மகள் வித்யா குளக்கரைக்கு தண்ணீர் எடுக்கச் சென்றபோது மர்மமான முறையில் கழுத்தறுக்கப்பட்டு உயிருக்குப் போராடி வந்த நிலையில் தைல மரக்காட்டில் இருந்து மீட்டெடுக்கப்பட்டார்.

பின்னர் சிகிச்சைக்காக தஞ்சை அரசு  மருத்துவமனையில் சேர்க்கபப்ட்ட சிறுமி சிகிச்சைப் பலனின்றி 19-ஆம் தேதி இரவு உயிரிழந்தார். தொடக்கத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டாரா என்கிற கோணத்தில் விசாரித்து வந்தனர். ஆனால் சிறுமியின் பிரேத பரிசோதனையில் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என்பது உறுதியானது.

பின்னர் விசாரணையை துரிதப்படுத்தியபோதுதான், மந்திரவாதியின் பேச்சைக் கேட்டு பெற்ற மகளான 13 வயது சிறுமியை, சிறுமியின் தந்தையே பணம், செல்வாக்கு கிடைக்கும் என்கிற மூடநம்பிக்கை காரணமாக கொலை செய்துள்ளதும், இதில் பன்னீர்செல்வத்தின் உறவினரும் உடந்தையாக இருந்ததும் தெரியவந்துள்ளது. 

ஆனால் அந்த தந்தையே தனது மகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறி நாடகமாடியுள்ளார். இந்நிலையில் அந்த மந்திரவாதியை தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். இந்த கொலையை ஒப்புக்கொண்ட பன்னீர் செல்வம், அவருக்கு உடந்தையாக இருந்த உறவினர் குமார் மற்றும் கொலையில் சம்மந்தப்பட்டோர் என பெண் மந்திரவாதி வசந்தி உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இதனிடையே கடந்த 2 நாட்களுக்கு முன் பன்னீர்செல்வத்தின் 2வது மனைவி மூக்காயி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதும், சிறுமியின் நரபலிக்கு மூக்காயியும் உடந்தையாக இருந்ததாகவும் விசாரணையில் தகவல் தெரியவந்துள்ளது. 

மற்ற செய்திகள்