நேருக்குநேர் 'மோதல்'... சுக்குநூறாக உடைந்த மோட்டார்சைக்கிள்கள்.. 'அசுர' வேகத்தினால் 3 பேர் பரிதாபமாக உயிரிழப்பு...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மதுரை மாவட்டம் எம்.சுப்பலாபுரத்தைச் சேர்ந்த கார்த்திக் பாண்டி (33). இவர் நத்தம்பட்டி காவல் நிலையத்தில் பணிபுரிந்துவந்தார். இவரும் இவரது உறவினர் ஜெயபாண்டியும் (18) இன்று காலை எம்.சுப்பலாபுரத்திலிருந்து திருமங்கலத்திற்கு டூவீலரின் சென்றனர். இதேபோல் தேனியில் இருந்து கேசவன்(19), எத்தனராஜா(21) ஆகிய இருவரும் ராஜபாளையம் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.

நேருக்குநேர் 'மோதல்'... சுக்குநூறாக உடைந்த மோட்டார்சைக்கிள்கள்.. 'அசுர' வேகத்தினால் 3 பேர் பரிதாபமாக உயிரிழப்பு...!

அதிவேகமாக வந்த இரு வாகனங்களும் டி.கல்லுப்பட்டி அருகே நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் கார்த்திக் பாண்டி, கேசவன், எத்தனராஜா ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த ஜெயபாண்டி மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்து குறித்து டி.கல்லுப்பட்டி போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

BIKE, ACCIDENT, BROKEN