திருமணம் முடிந்த 9 வது நாளில்.. தாலியை கழட்டி வைத்து இளம் பெண் எஸ்கேப்.. லெட்டரை பார்த்து ஷாக் ஆன புது மாப்பிள்ளை

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

திருவண்ணாமலை: செய்யாறு அருகே திருமணமான 9 நாட்களில் தாலியை கழற்றி  வைத்துவிட்டு  இளம்பெண் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருமணம் முடிந்த 9 வது நாளில்.. தாலியை கழட்டி வைத்து இளம் பெண் எஸ்கேப்.. லெட்டரை பார்த்து ஷாக் ஆன புது மாப்பிள்ளை

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் உறவுகள் என்பது முக்கியமான அங்கம். நண்பர்களோ, உறவினர்களோ என யாராவது உங்களிடம் அன்பு செலுத்தினால், அதை ஏற்பதும் மறுப்பதும் உங்களுடைய முடிவாகும். பெற்றோர்கள் முடித்து வைத்த திருமணமாக இருந்தாலும், காதல் மணம் புரிந்த தம்பதியராய் இருந்தாலும், மணமொத்த தம்பதியராய் வாழ்க்கை முழுக்க வாழவே கணவன் மனைவி இருவரும் விரும்புவார்கள். கண்ணும் கண்ணும் கலந்து காதல் புரிந்து ஊடலோடு திருமணம் செய்து கொண்ட தம்பதியர் கூட பிரிவை அதிகம் சந்தித்து வரும் நிகழ்வு அதிகரித்து வருகிறது.

திருமண உறவு

இன்றைய காலகட்டத்தில் விவாகரத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதே தம்பதியரின் அன்னியோன்யம் குறைந்து வருவதற்கு எடுத்துக்காட்டாக சொல்லலாம். ஆனால், வாழ தொடங்குவதற்கு முன்பே ஒரு பெண் கடிதம் எழுதி வைத்து விட்டு காணாமல் போன சம்பவம் அரங்கேறியுள்ளது. திருமண கனவுகளோடு இருந்த இளைஞர் காவல் நிலையம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம்  வேறு எங்கும் இல்லை திருவண்ணாமலையில் நடந்துள்ளது.

திருவண்ணாமலையில் திருமணம்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள வெம்பாக்கம் தாலுகா சீம்பலம் அருந்ததிபாளையத்தை சேர்ந்தவர் யுவராஜ் (33). சென்னை ஓரகடத்தில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி தாலுகா அரண்வாயல் கிராமத்தை சேர்ந்த ஜெயஸ்ரீ (24) என்பவருக்கும் கடந்த 6ம் தேதி பெற்றோர்கள் தலைமையில் திருமணம் நடந்து முடிந்தது.

கண்ணீர் விடும் புது மாப்பிள்ளை

இந்நிலையில், கடந்த 11ம் தேதி ஜெயஸ்ரீக்கு யுவராஜ் வீட்டில் குடும்பத்தினர், உறவினர்கள் முன்னிலையில் தாலி பிரித்து கோர்க்கும்' நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து 2 நாட்களாக ஜெயஸ்ரீயின் பெற்றோர், உறவினர்கள் மகளுடன் இருந்தனர். நேற்று காலை சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர். மேலும், யுவராஜூம் வழக்கம்போல் நேற்று வேலைக்கு சென்றார். இந்நிலையில், வீட்டில் இருந்த ஜெயஸ்ரீ மாலை நேரத்தில் எங்கே போனார் என்று தெரியாமல். மாப்பிள்ளை குடும்பத்தார் தேடியுள்ளனர். எங்கும் தேடியும் கிடைக்கவில்லை. இதனையடுத்து மாப்பிள்ளை யுவராஜூக்கு குடும்பத்தினர் தகவல் தெரிவித்தனர்.

THIRUVANNAMALAI, MARRIED GIRL, ESCAPE, LETTER, POLICE INVESTIGATION

மற்ற செய்திகள்