"என் மகன் விட்டுச்சென்ற பணிகளை தொடர்வேன்".. ஈரோடு கிழக்கு தொகுதியில் தொடர்ந்து முன்னிலை.. EVKS இளங்கோவன் உருக்கம்.!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.

"என் மகன் விட்டுச்சென்ற பணிகளை தொடர்வேன்".. ஈரோடு கிழக்கு தொகுதியில் தொடர்ந்து முன்னிலை.. EVKS இளங்கோவன் உருக்கம்.!

                             Images are subject to © copyright to their respective owners.

Also Read | "2 பந்து வீசுற வரை பொறுமையா இருக்க கூடாதா?".. சுப்மன் கில் செஞ்ச வேலை.. கடுகடுத்த கவாஸ்கர்..!

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத் தேர்தல் கடந்த 27 ஆம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி சார்பில் ஈவிகேஸ் இளங்கோவன் தேர்தலில் போட்டியிட்டார். அவருக்கு ஆதரவாக அமைச்சர்கள் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த இடை தேர்தலில் அதிமுக சார்பில் கேஎஸ் தென்னரசுவும் தேமுதிக சார்பில் ஆனந்த் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் போட்டியிட்டனர்.

தற்போதைய சூழ்நிலையில் ஏழாவது சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் திமுக கூட்டணி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் EVKS இளங்கோவன் 55,165 வாக்குகளையும், அதிமுகவின் தென்னரசு 20,988 வாக்குகளையும் நாம் தமிழர் 3502 வாக்குகளையும் தேமுதிக 1414 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

Erode East By election EVKS Ilangovan on leading Majority

Images are subject to © copyright to their respective owners.

இதன்மூலம் EVKS இளங்கோவன் அதிமுக வேட்பாளர் தென்னரசுவை விட 34,127 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார். இந்த சூழ்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த EVKS இளங்கோவன்,"ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வெற்றியின் பெருமை முதல்வர் முக ஸ்டாலினையே சேரும். அவருடைய தலைமையிலான சட்டசபையில் பங்கேற்பது பெருமையாக இருக்கிறது. வரும் பாராளுமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற கூட்டணி வெற்றி பெறும் என்பதற்கு இந்த இடைத்தேர்தல் ஓர் எடுத்துக்காட்டு. எனது மகன் விட்டுச் சென்ற பணிகளை தொடர்வதோடு ஈரோடு மக்களின் கோரிக்கைகளை அவர்களது பிரதிநிதியாக சட்டசபையில் எடுத்துரைப்பேன். அவர்களுக்கான நலத் திட்டங்கள் குறித்து முதல்வருடன் பேசுவேன்" என தெரிவித்திருக்கிறார்.

இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் EVKS இளங்கோவன் தொடர்ந்து முன்னிலை பெற்று வருவதால் கூட்டணி கட்சி தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் இதனை கொண்டாடி வருகின்றனர்.

Also Read | கடலையில் தெரிந்த பெண்ணின் முகம்?.. 12 மணி நேரம் காத்திருந்த போட்டோகிராஃபருக்கு சர்ப்ரைஸ்.. வைரல் Pic..!

ERODE EAST ELECTION, EVKS ILANGOVAN

மற்ற செய்திகள்