சார்! என் பொண்டாட்டிய வேற ஒருத்தருக்கு 'நிச்சயம்' பண்ணிட்டாங்க... போலீஸ் ஸ்டேஷன் சென்ற என்ஜினீயர்... என்ன நடந்தது?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தன்னுடைய காதல் மனைவியை வேறு ஒருத்தருக்கு நிச்சயம் செய்து விட்டதாக தெரிவித்து இருக்கிறார்.

சார்! என் பொண்டாட்டிய வேற ஒருத்தருக்கு 'நிச்சயம்' பண்ணிட்டாங்க... போலீஸ் ஸ்டேஷன் சென்ற என்ஜினீயர்... என்ன நடந்தது?

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பகுதியை சேர்ந்தவர் மூவரசன்(28). இவரும் அதே பகுதியை சேர்ந்த பெண் என்ஜினீயர் ஒருவரும் காதலித்து வந்தனர். இரண்டு பேரும் சென்னையில் உள்ள தனியார் நிறுவனமொன்றில் வேலை பார்த்து வந்துள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன் இருவரும் பதிவுத்திருமணம் செய்து கொண்டுள்ளனர்.  கொரோனா காரணமாக தங்களது ஊருக்கு திரும்பிய இருவரும் தங்களது திருமணம் குறித்து யாரிடமும் எதுவும் கூறாமல் அவரவர் வீட்டில் இருந்து வேலை பார்த்து வந்துள்ளனர். இந்தநிலையில் அந்த இளம்பெண்ணின் பெற்றோர், அவருக்கு மாப்பிள்ளை பார்த்து நிச்சயதார்த்தம் செய்துள்ளனர்.

இதுகுறித்து இளம்பெண் தனது காதலன் மூவரசனுக்கு இ-மெயில் மூலம் தெரிவித்தார். மேலும், தன்னை அழைத்து செல்லும்படி கூறியுள்ளார். இதனைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த மூவரசன், நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். மேலும் எனது காதலியை மீட்டுத்தந்து எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார். தற்போது போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்ற செய்திகள்