'தமிழக அமைச்சருக்கு கொரோனா'... 'உடல்நிலை சீராக உள்ளது'... மருத்துவமனையில் சிகிச்சை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

'தமிழக அமைச்சருக்கு கொரோனா'... 'உடல்நிலை சீராக உள்ளது'... மருத்துவமனையில் சிகிச்சை!

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே  செல்கிறது. களத்தில் நிற்கும் காவல்துறையினர் அதிகமாகப் பாதிக்கப்படும் நிலையில், மக்கள் பிரதிநிதிகளும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.  இந்த நிலையில், மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து அமைச்சர் தங்கமணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல் நிலை சீராக இருப்பதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா தொற்று காரணமாக முதலமைச்சர், மத்திய எரிசக்தித் துறை இணை அமைச்சர் சந்திப்பில் அவர் கலந்து கொள்ளவில்லை. உயர் கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்