'பொது முடக்கம் நீட்டிப்பு'?... 'முதலமைச்சர் நடத்திய முக்கிய ஆலோசனை'... வெளியாகும் முக்கிய அறிவிப்புகள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கொரோனா தொற்று பரவலைத் தடுக்க கடந்த மார்ச் 24-ந் தேதியிலிருந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், வரும் 31ம் தேதியுடன் ஊரடங்கு முடிவிற்கு வருகிறது. ஆனால் தமிழகத்தில் கொரோனா பரவல் என்பது அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது என்பது பெரும் சவாலாக உள்ளது. அதே நேரத்தில் மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு படிப்படியாகத் தளர்வுகளை அனுமதித்து வருகிறது.

'பொது முடக்கம் நீட்டிப்பு'?... 'முதலமைச்சர் நடத்திய முக்கிய ஆலோசனை'... வெளியாகும் முக்கிய அறிவிப்புகள்!

இந்த சூழ்நிலையில் இன்று காலை 4 மணி நேரம் மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.  அதனைத் தொடர்ந்து  இன்று பிற்பகலில் மருத்துவ நிபுணர் குழுவுடன் காணொலிக் காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். 7-ம் கட்ட ஊரடங்கு வரும் 31-ம் தேதியுடன் முடியும் நிலையில், மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது தமிழகத்தில் பொதுப் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. அந்த தடை தொடருமா அல்லது ஏதேனும் தளர்வுகள் அறிவிக்கப்படுமா என்பது குறித்து மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அதேநேரத்தில் ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்களின் கருத்தைக் கேட்டு அறிந்து புதிய தளர்வுகள் பற்றி  முதலமைச்சர் பழனிசாமி அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகஸ்ட் மாதத்தில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், மேலும் தளர்வுகளோடு கூடிய ஊரடங்கு தொடரும் என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன.

மற்ற செய்திகள்