'கொழந்தை' பொறந்தா ரெண்டு பேரும்... 'ஒண்ணா' சேர்ந்துடுவாங்க நெனைச்சோம்... அடுத்தடுத்த 'மரணங்களால்' அதிர்ந்து போன உறவினர்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

குழந்தை பிறந்த சில மணி நேரங்களில் பிரபாவும் இறந்தார். இதையடுத்து உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

'கொழந்தை' பொறந்தா ரெண்டு பேரும்... 'ஒண்ணா' சேர்ந்துடுவாங்க நெனைச்சோம்... அடுத்தடுத்த 'மரணங்களால்' அதிர்ந்து போன உறவினர்கள்!

சென்னை திருவொற்றியூர் ஜோதி நகரை சேர்ந்தவர் கணேசலிங்கம். இவர் தனியார் நிறுவனமொன்றில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் பிரபா(24) என்னும் இளம்பெண்ணுக்கு கடந்த ஓராண்டுக்கு முன் திருமணம் நடைபெற்றது. திருமணமான 4 மாதங்களில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். மேலும் வரதட்சணை மற்றும் விவாகரத்து தொடர்பாகவும் வழக்கு நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் பிரபா கர்ப்பமாக இருந்து வந்தார். குழந்தை பிறந்தால் இருவரும் சமாதானமாகி விடுவார்கள் என உறவினர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்த நிலையில் நேற்று பிரவசத்திற்காக பிரபா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு குழந்தை இறந்து பிறந்தது. தொடர்ந்து பிரபாவின் நிலையும் மோசமானதால்  அவர் அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பிரபா இறந்து போனார். மருத்துவர்கள் போதிய கவனம் செலுத்தாதே பிரபாவின் மரணத்துக்கு காரணம் என அவரது உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டம் செய்தனர். தொடர்ந்து அந்த இடத்துக்கு வந்த போலீசார் பிரபாவின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து பிரபாவின் உடலை பெற்றுக்கொண்டு உறவினர்கள் கலைந்து சென்றனர்.

மற்ற செய்திகள்