My India Party

'நடிகை' சித்ராவின் உடலுக்கு 'அஞ்சலி' செலுத்திய 'நாய்'... மனதை உலுக்கும் 'வீடியோ' காட்சிகள்!!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா நேற்று சென்னை நட்சத்திர ஹோட்டலில் வைத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம், அவரது ரசிகர்கள் மற்றும் திரைத்துறை வட்டாரத்தில் கடும் அதிர்ச்சியையும், மன வேதனையையும் அளித்தது.

'நடிகை' சித்ராவின் உடலுக்கு 'அஞ்சலி' செலுத்திய 'நாய்'... மனதை உலுக்கும் 'வீடியோ' காட்சிகள்!!!

தனது வருங்கால கணவருடன் ஹோட்டலில் இருந்த போது சித்ரா தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் தெரிவித்த நிலையில், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அவர் தற்கொலை செய்து கொள்ளக் கூடிய பெண்ணல்ல என்றும் சித்ராவின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

அதே போல, சின்னத்திரையில் சித்ராவுக்கு நெருங்கியவர்களும் அவர் தற்கொலை செய்து கொள்ளக் கூடிய எண்ணம் உடையவர் அல்ல. மற்றவர்கள் தங்களின் வேதனையை மறக்க வைக்கும் படி கலகலப்பாக இருக்கும் சித்ரா எப்படி தற்கொலை செய்து கொள்வார் என்ற கேள்வியை எழுப்பியுள்ளனர். அவரது மரணம் தொடர்பாக தீவிரமாக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று சித்ராவின் உடல் பிரேத பரிசோதனை முடிவடைந்து பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், அவர் தற்கொலை செய்துள்ளதாக முடிவிற்கு பிறகு தகவல்கள் வெளியாகியுள்ளது. அவரது உடல் பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், பல சின்னத்திரை பிரபலங்கள் கண்ணீர் மல்க தங்களது அஞ்சலியை தெரிவித்து வருகின்றனர். இதில், சித்ராவின் வீட்டிலுள்ள நாய் ஒன்று அவரது உடலுக்கு  அஞ்சலி செலுத்துவது பார்ப்பவர்களின் மனதை உருக வைப்பதாக உள்ளது.

வீடியோவைக் காண:

மற்ற செய்திகள்