Darbar USA

உன் குழந்தையா இது...? வசமா மாட்டிக்கிட்ட 'குழந்தை 'திருடன்... சென்ட்ரலில் கடத்தப்பட்ட குழந்தை மீட்பு...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து கடத்தப்பட்ட இரண்டு வயது குழந்தை, திண்டுக்கல் ரயில் நிலையத்தில் பத்திரமாக மீட்கப்பட்டது. மேலும் கடத்திய நபரையும்  போலீசார் கைது செய்தனர்.

உன் குழந்தையா இது...? வசமா மாட்டிக்கிட்ட 'குழந்தை 'திருடன்... சென்ட்ரலில் கடத்தப்பட்ட குழந்தை மீட்பு...!

அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் அஜார்அலி. இவருடைய மனைவி மெர்ஜினா, இவர்களுக்கு ரசிதா என்ற 2 வயது பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடந்த 12ம் தேதி இரவு தூங்கி கொண்டிருக்கும் போது குழந்தை ரசிதாவைக் காணவில்லை.

இதனையடுத்து சென்னை சென்ட்ரல் ரயில்வே போலீசாரிடம் அதிகாலை 2.30 மணிக்கு தனது குழந்தை ரசிதாவை காணவில்லை என அஜார் அலி புகார் கொடுத்திருந்தார். புகாரின் பேரில் அங்கு பதிவான சிசிடிவி காட்சிகளை கொண்டு ரயில்வே போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் மும்பையிலிருந்து நாகர்கோவில் செல்லும் விரைவுரயில் திண்டுக்கல் அருகே உள்ள பாளையம் ரயில் நிலையம் வந்தபோது சந்தேகத்திற்கு இடமான நிலையில் கையில் சிறுவயது குழந்தையை வைத்திருப்பதை கண்ட பயணிகள், இந்த குழந்தை யாருடையது என கேட்டு அவனிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அந்த ரயில் பெட்டியில் ரோந்து பணியில் இருந்த போலீசார் 2 வயது குழந்தை மற்றும் மேற்கு வங்க மாநிலம் குல்டிகிரி பகுதியைச் சேர்ந்த தீபக் மண்டல் என்பவனையும் திண்டுக்கல் ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

போலீசாரின் விசாரணையில் சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்திலிருந்து காணாமல் போன குழந்தைதான் என்பது தெரியவந்தது. பின்னர் கடத்தி வரப்பட்ட குழந்தை ரசீதா மற்றும் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட தீபக் மண்டல் ஆகிய இருவரையும் சென்னை சென்ட்ரல் ரயில்வே போலீசாரிடம் ஒப்படைக்க அனுப்பிவைத்தனர்.

CHENNAICENTRAL, KIDNAP