"என் பையன மட்டும் நல்லா பாத்துக்கங்க அப்பா"... "இந்த மானங்கெட்ட உலகில் வாழ விருப்பமில்ல"... இறுதி நிமிடங்களை ஃபேஸ்புக்கில் ’வீடியோ நேரலை’ செய்த 'இளைஞர்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தாராபுரத்தை சேர்ந்த ராம்குமார் என்பவர் தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், தனது தந்தைக்கு செல்போன் மூலம் அழைத்த ராம்குமார், தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும், எனது மகனை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள் என கூறி விட்டு இணைப்பை துண்டித்துள்ளார்.

"என் பையன மட்டும் நல்லா பாத்துக்கங்க அப்பா"... "இந்த மானங்கெட்ட உலகில் வாழ விருப்பமில்ல"... இறுதி நிமிடங்களை ஃபேஸ்புக்கில் ’வீடியோ நேரலை’ செய்த 'இளைஞர்'!

வீட்டில் மனைவி இல்லாத நேரம் பார்த்து ராம்குமார் இந்த முடிவை எடுத்துள்ள நிலையில், தனது ஃபேஸ்புக் பக்கத்தில் நேரலை செய்து விட்டு ராம்குமார் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தொடர்ந்து இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ராம்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அத்துடன், ராம்குமார் தனது கைப்பட எழுதி வைத்திருந்த தற்கொலை குறிப்பைக் கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதில், 'மானங்கெட்ட உலகில் வாழ விருப்பமில்லை' என ராம்குமார் குறிப்பிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்