'பலரின் சொந்த வீடு கனவு'... 'சென்னையில் வீடு விற்பனை என்ன ஆச்சு'?... வெளியான ஆய்வு முடிவுகள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கொரோனா 2-ஆவது அலை பொருளாதாரத்தைக் கடுமையாகப் பாதித்துள்ளது.

'பலரின் சொந்த வீடு கனவு'... 'சென்னையில் வீடு விற்பனை என்ன ஆச்சு'?... வெளியான ஆய்வு முடிவுகள்!

பிரபல வீட்டுவசதி தரகு நிறுவனமான 'புரோப்டைகர்' வீடு விற்பனை குறித்து ஆய்வு ஒன்றை நடத்தியது. இதில் சென்னை உள்ளிட்ட 8 நகரங்களில் 3 மாதங்களில் வீடுகள் விற்பனை 76 சதவிகிதம் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2020-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான 3 மாதத்தில் 66 ஆயிரத்து 176 வீடுகள் விற்பனையான நிலையில் இந்தாண்டு அதே 3 மாதத்தில் 15 ஆயிரத்து 968 வீடுகள் மட்டுமே விற்பனையானதாக ஆய்வுத் தகவல் தெரிவிக்கிறது.

Decline in sale of new house in chennai

சென்னையைப் பொறுத்தவரை வீடு விற்பனை 4 ஆயிரத்து 468 ஆகக் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை பல துறைகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ரியல் எஸ்டேட் துறை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்