"அப்பா எங்க போனார்? வீட்டுக்கு வர சொல்லுங்க" சுட்டுக்கொல்லப்பட்ட 'வில்சன்' மகளின் உள்ளத்தை உருக்கும் 'தந்தை' பாசம்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை செக்போஸ்டில் பணியில் இருந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் நேற்று முன்தினம் இரவு துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

"அப்பா எங்க போனார்? வீட்டுக்கு வர சொல்லுங்க" சுட்டுக்கொல்லப்பட்ட 'வில்சன்' மகளின் உள்ளத்தை உருக்கும் 'தந்தை' பாசம்...!

எஸ்.ஐ. வில்சனின் மனநலம் பாதிக்கப்பட்ட இளைய மகள் தந்தை இறந்ததை உணர்ந்துக்கொள்ள முடியாமல், ‘அப்பா எங்க போனார்? வீட்டுக்கு வர சொல்லுங்க’ என கேட்டு கதறி அழுதது, அங்கிருந்தவர்களை மனமுருகச் செய்தது.

வில்சனின் இளைய மகள் வினிதா மனநலம் பாதிக்கப்பட்டவர். இவர் குழித்துறை பகுதியிலுள்ள மனநலம் குன்றியோர் பள்ளியில் படித்து வருகிறார். தனது மனைவி மற்றும் மூத்த மகளைவிட வினிதாவிடம் வில்சன் அதிக பாசம் வைத்திருந்தார். வினிதாவை கவனிப்பதற்காவே தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து குமரி மாவட்டத்துக்கு பணியிட மாறுதல் பெற்று வந்துள்ளார் வில்சன்.

இந்த நிலையில் சுட்டுக்கொல்லப்பட்ட வில்சனின் உடலை வீட்டுக்கு கொண்டு சென்ற காட்சி அங்கிருந்தவர்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியது.

#POLICE, #FATHERSLOVE