வாசிங்டன் சுந்தர் களமிறங்கும் ‘புது’ இன்னிங்ஸ்.. சென்னை மாநகராட்சி ‘அசத்தல்’ அறிவிப்பு..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை மாநகராட்சியின் தேர்தல் தூதராக தமிழக கிரிக்கெட் வீரர் வாசிங்டன் சுந்தர் நியமிக்கப்பட்டுள்ளார்.

வாசிங்டன் சுந்தர் களமிறங்கும் ‘புது’ இன்னிங்ஸ்.. சென்னை மாநகராட்சி ‘அசத்தல்’ அறிவிப்பு..!

சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளிலும் முதல் தலைமுறை வாக்காளர்களை ஊக்குவிப்பதற்காக இந்திய கிரிக்கெட் அணி வீரரும், தமிழகத்தை சேர்ந்தவருமான வாசிங்டன் சுந்தரை சென்னை மாநகராட்சி நியமித்துள்ளது. முதல் தலைமுறை வாக்காளரான வாசிங்டன் சுந்தர், இளம் வாக்காளர்கள் தேர்தலில் பங்களிப்பை செலுத்த ஊக்கமாக இருப்பார் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில், ‘இது நம்ம இன்னிங்ஸ்’ என்ற ஹேஷ்டேக் மூலம் வாஷிங்டன் சுந்தர் நியமனம் தொடர்பாக வீடியோவுடன் அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்துக்கு பிறகு சென்னைக்கு திரும்பிய வாசிங்டன் சுந்தர், தன்னை தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார். தனிமைக்கு பின்னர் சென்னை முழுவதும் இளம் வாக்காளர்களை கவர நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் வாசிங்டன் சுந்தர் ஆன்லைன் மூலம் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்