'கொரோனாவிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை குறைந்தது'... ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் சொன்ன முக்கிய காரணம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றிலிருந்து குணம் அடைந்தோர் விகிதம் குறைந்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

'கொரோனாவிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை குறைந்தது'... ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் சொன்ன முக்கிய காரணம்!

தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமாகப் பரவி வரும் நிலையில் தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா நோயிலிருந்து குணம் அடைந்தோர் விகிதம் சற்று குறைந்துள்ளது. இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது, ''கொரோனா நோயிலிருந்து குணம் அடைந்தோர் விகிதம் குறைந்ததற்கு முக்கிய காரணம் மருத்துவ வல்லுநர்களுடன் இணைந்து சிகிச்சை வழிமுறைகளை மாற்றி நிர்ணயித்ததுதான். முன்பெல்லாம் பத்து நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு மூன்று நாட்கள் தொடர் காய்ச்சல் இல்லை என்றால் கொரோனா தொற்றாளர்களை டிஸ்சார்ஜ் செய்து கொண்டிருந்தோம்.

Covid recovery rate is declining in tamilnadu, says J radhakrishnan

தற்போது டிஸ்சார்ஜ் செய்த பிறகும் கூட, சில தொற்றாளர்களுக்குச் சிரமங்கள் இருந்தால், ஓரிரு நாட்கள் தேவைப்பட்டால் கோவிட் கவனிப்பு மையத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். இதனால் தான் அவர்களைக் குணமடைந்து வீடு திரும்புவதாகக் காட்டாமல், சிகிச்சையில் இருப்பதாகக் காட்டுவதால்தான் குணம் அடைந்தோர் விகிதம் சற்று குறைந்துள்ளதாகத் தோன்றுகிறது. கொரோனா தொற்று ஏற்படுவோரின் திடீர் இறப்பு எண்ணிக்கையைக் குறைக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதே நேரத்தில் தமிழகத்தின் கோவிட் தொற்றுப் பரிசோதனைகளின் எண்ணிக்கை எந்த விதத்திலும் குறைக்கப்படவில்லை. தற்போது எண்ணிக்கை ஒன்றரை லட்சத்தைத் தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது. கொரோனா தொற்றுப் பரவல் விகிதம் சற்று அதிகரித்து, அதிலேயே நின்ற பிறகு மெதுவாகக் குறையும் என்பதுதான் தொற்று நோய் நிபுணர்களின் கணிப்பாக உள்ளது'' என்று மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

மற்ற செய்திகள்