'எனக்கு இந்த பால்ல தான் மில்க் ஷேக் வேணும்'.... 'இளைஞர்கள் சொன்னதை கேட்டு அதிர்ச்சி ஆன பேக்கரி ஓனர்'... பரபரப்பு சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தலைக்கேறிய போதையால் பேக்கரிக்கு சென்று கல்லூரி மாணவர்கள் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'எனக்கு இந்த பால்ல தான் மில்க் ஷேக் வேணும்'.... 'இளைஞர்கள் சொன்னதை கேட்டு அதிர்ச்சி ஆன பேக்கரி ஓனர்'... பரபரப்பு சம்பவம்!

மது போதை தலைக்கேறினால் என்ன செய்கிறோம் என்பதே அந்த நபர்களுக்குத் தெரியாது. அத்துடன் கஞ்சாவும் சேர்ந்தால் அவர்களின் நிலைமையை நினைத்துக் கூட பார்க்க முடியாது. அதிலும் தற்போது கல்லூரி மாணவர்கள் பலர் போதைக்கு அடிமையாகி தங்களின் எதிர்காலத்தைத் தொலைப்பது தான் வேதனையான விஷயம். அதுபோன்ற ஒரு சம்பவம் தான் தற்போது நடந்துள்ளது. புதுச்சேரியை அடுத்த அரியாங்குப்பம் பைபாஸ் பகுதியில் நாராயணன் என்பவர் பேக்கரி நடத்தி வருகிறார்.

அவரது பேக்கரிக்கு 3 கல்லூரி மாணவர்கள் வந்தனர். அவர்கள் 3 பேரும் கடும் போதையில் இருந்துள்ளார்கள். பேக்கரிக்கு வந்த அவர்கள், ஒட்டகப்பாலில் மில்க் ஷேக் வேண்டும் எனக் கேட்டுள்ளார்கள். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பேக்கரி ஓனர், அவர்கள் போதையில் இருப்பதை உணர்ந்து, ஒட்டகப்பால் மில்க் ஷேக் எல்லாம் எங்களிடம் இல்லை எனக் கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த 3 இளைஞர்கள் பேக்கரியை அடித்துச் சூறையாடி ஊழியர்களையும் தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றனர்.

College Students riot over camel milk in pondicherry

இந்த காட்சிகள் அனைத்தும் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த காட்சிகளைக் கொண்டு அரியாங்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வந்தநிலையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக வேல்ராம்பட்டு பகுதியைச் சேர்ந்த கோகுல், உதயகுமார், முருகவேல் ஆகியோரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மூன்று இளைஞர்களும் புதுச்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் பயின்று வருவதாகத் தெரிகிறது. பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு காலாப்பட்டு மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டனர்

மற்ற செய்திகள்