ET Others

என்னையும் அடிங்க.. அப்பதான் சந்தேகம் வராது.. காலேஜ் ஸ்டூடண்ட் போட்ட திட்டம்.. உண்மை தெரிஞ்சு மிரண்டு போன ஹவுஸ் ஓனர்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சிவகங்கை அருகே வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவரால் ஹவுஸ் ஓனருக்கு நடந்த விபரீதம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

என்னையும் அடிங்க.. அப்பதான் சந்தேகம் வராது.. காலேஜ் ஸ்டூடண்ட் போட்ட திட்டம்.. உண்மை தெரிஞ்சு மிரண்டு போன ஹவுஸ் ஓனர்..!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சூடாமணிபுரத்தை சேர்ந்தவர் லதா. இவர் தனது தாயுடன் வீட்டில் வசித்து வருகிறார். இவரின் வீட்டின் மேல் மாடியில் உள்ள அறையில் ஒரு கல்லூரி மாணவர் பூபதி பாண்டியன் உட்பட 8 பேர் தங்கி பல்வேறு வேலைகளுக்கு சென்று வந்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்றிரவு புகுந்த முகமூடி அணிந்த 4 பேர் திடீரென வீட்டிற்குள் புகுந்துள்ளனர். அப்போது வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்த கல்லூரி மாணவரை கட்டையால் தாக்கியுள்ளனர். பின்னர் வீட்டு உரிமையாளர் லதா மற்றும் அவரது தாயாரை கத்தியை வைத்து மிரட்டி அவர்கள் அணிந்திருந்த 17 சவரன் நகையை கொள்ளையடித்துவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

இதுகுறித்து  காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் லதா புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் ராஜ்குமார் விசாரணை மேற்கொண்டார். அப்போது சந்தேகத்தின் பேரில் கல்லூரி மாணவரிடம் விசாரணை மேற்கொண்டார். அதில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. விசாரணையில், கல்லூரி மாணவர் பூபதி பாண்டியன், லதாவிற்கு உதவி செய்வதுபோல் நடித்து அவரிடம் இருக்கும் நகைகள் குறித்த விவரங்களை தெரிந்து கொண்டுள்ளார்.

College student steels house owner jewelry in Sivaganga

பின்னர் தனது நண்பர்களின் உதவியுடன் வீட்டு உரிமையாளர் லதாவின் நகையை கொள்ளையடித்தது தெரியவந்தது. மேலும்,போலீஸ் விசாரணையில், சந்தேகம் வந்துவிடக் கூடாது என்பதற்காக தன்னையும் தாக்க சொல்லி நாடகமாடியது தெரிய வந்துள்ளது.

இதனை அடுத்து பூபதி பாண்டியன் மற்றும் அவரது நண்பர்களான ஆனந்த், சுதன், ஐயப்பன் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 17 சவரன் நகையையும் பறிமுதல் செய்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

COLLEGESTUDENT, ROBBERY, SIVAGANGA

மற்ற செய்திகள்