'50' மாணவர்களுடன் தறிகெட்டு ஓடிய 'பேருந்து'... 'கட்டுப்பாட்டை' இழந்ததால் நிகழ்ந்த 'விபரீதம்'... 'அலறித்' துடித்த 'மாணவர்கள்'...

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே தனியார் கல்லூரி பேருந்து கவிந்து விழுந்து நேரிட்ட விபத்தில் 50 மாணவ-மாணவியர் படுகாயமடைந்தனர். அவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

'50' மாணவர்களுடன் தறிகெட்டு ஓடிய 'பேருந்து'... 'கட்டுப்பாட்டை' இழந்ததால் நிகழ்ந்த 'விபரீதம்'... 'அலறித்' துடித்த 'மாணவர்கள்'...

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே அமைந்துள்ள தனியார் கல்லூரி ஒன்றில், சேத்தியாத்தோப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான மாணவ-மணவிகள் படித்து வருகின்றனர். இவர்கள் கல்லூரிப் பேருந்தில் தினசரி அழைத்துச் செல்லப்படுவது வழக்கம்.

அதன்படி இன்று காலை சேத்தியாத்தோப்பில் இருந்து ஸ்ரீமுஷ்ணம் நோக்கி கல்லூரி பேருந்து புறப்பட்டு வந்தது. இந்த பேருந்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் இருந்தனர்.

இந்த பேருந்து சாஸ்தா வட்டம்- நாச்சியார்பேட்டைக்கும் இடைப்பட்ட பகுதியில் வேகமாக சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக  ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணம் செய்த 50 மாணவ-மாணவியரும் காயமடைந்தனர்.

அவர்களது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர், காயமடைந்த மாணவ-மாணவிகளை மீட்டு முதலுதவி அளித்தனர். பின்னர் 108 ஆம்புலன்சை வரவழைத்து அவர்களை மருத்தவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சேத்தியாத் தோப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

COLLEGE BUS, COLLIDE, CUDDALORE, 50 STUDENTS, ACCIDENT