கோவை: யூபிஎஸ் பேட்டரி வெடித்து வெளிவந்த புகை.. அணைக்க முயன்ற அம்மா, மகளுக்கு நேர்ந்த சோகம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கோவையில் யூபிஎஸ் பேட்டரி வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் அம்மா, மகள்கள் உள்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை: யூபிஎஸ் பேட்டரி வெடித்து வெளிவந்த புகை.. அணைக்க முயன்ற அம்மா, மகளுக்கு நேர்ந்த சோகம்..!

கோவை உருமாண்டம்பாளையம் ஜோஸ் கார்டன் பகுதியை சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவருக்கு அர்ச்சனா மற்றும் அஞ்சலி என இரு மகள்கள் உள்ளனர். இவரது கணவர் ஜோதிலிங்கம் கடந்த 2 வருடங்களுக்கு முன் இறந்துவிட்டார். ஒரு மகள் ஐடி கம்பெனியிலும், மற்றொரு மகள் பைனான்ஸ் தொழிலும் செய்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று காலை அவர்களது வீட்டில் இருந்து புகை வருவதை அக்கம்பக்கத்தினர் பார்த்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனே தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கவுண்டம்பாளையம் வடக்கு தீயணைப்பு துறையினர், தீயை அணைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

UPS battery explodes at house in Coimbatore

உள்ளே சென்று பார்த்தபோது சமையலறையில் அம்மா மற்றும் அவரது மகள்கள் இறந்து கிடந்துள்ளனர். இதுகுறித்து தீயணைப்பு துறையினர் தெரிவிக்கையில், ஹாலில் இருந்த யூபிஎஸ் வெடித்து தீ விபத்து ஏற்பட்ட காரணமாக புகை ஏற்பட்டுள்ளது. இதை அணைக்க அஞ்சலி மற்றும் அவரது அம்மா ஆகியோர் முயற்சித்ததாக தெரிகிறது.

ஆனால் அதற்குள் புகையால் மூச்சு திணறல் ஏற்பட்டு, சமையலறையில் இருந்த அஞ்சலி மற்றும் அம்மா ஆகியோர்  உயிரிழந்துள்ளனர். அர்ச்சனா படுக்கை அறையில் தூங்கிக்கொண்டிருந்த நிலையில் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

UPS battery explodes at house in Coimbatore

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பெரியநாயக்கன்பாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் ராஜபாண்டியன், துடியலூர் காவல் ஆய்வாளர் ஞானசேகரன் ஆகியார், உயிரிழந்த அம்மா, மகள்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து தடய அறிவியல் துறையினரை வரவழைத்து ஆய்வு செய்து வருகின்றனர். இந்த விபத்தில் அவர்கள் வீட்டில் வளர்த்து வந்த நாயும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளது. தீ விபத்தில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

UPS BATTERY, COIMBATORE, MOTHER, DAUGHTER

மற்ற செய்திகள்