'குப்ப மேட்டுல ஒளிஞ்சு இருந்த நண்பன்...' 'திடீர்னு கேட்ட சிறுமியின் அலறல்...' - திட்டம் போட்டு பாலியல் வன்கொடுமை செய்த நண்பர்கள்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கோவையில் நண்பர்கள் இருவர் சேர்ந்து 7-ம் வகுப்பு படிக்கும் மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'குப்ப மேட்டுல ஒளிஞ்சு இருந்த நண்பன்...' 'திடீர்னு கேட்ட சிறுமியின் அலறல்...' - திட்டம் போட்டு பாலியல் வன்கொடுமை செய்த நண்பர்கள்...!

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ள வீரபாண்டி பகுதியில் 7-ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமிக்கும் கவுண்டபாளையம் பிரபு நகரை சேர்ந்த 22 வயதான சந்தோஷிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சிறுமிக்கு போன் செய்த சந்தோஷ் தனது வீட்டிற்கு வரச் சொல்லி உள்ளார்.

சிறுமியும் சந்தோஷ் கூறியது போல் அவரது வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது சந்தோஷ், அவரது வீட்டிற்கு அருகில் உள்ள குப்பை மேட்டின் மறைவான பகுதிக்கு கூட்டி சென்றுள்ளார். அப்போது அங்கு மறைந்து இருந்த சந்தோஷின் நண்பர் சதிஷும் சேர்ந்து சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர்.

மேலும் சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அந்த வழியாக சென்ற சிலர், இருவரையும் பிடித்து அடித்து உதைத்துள்ளனர். அதையடுத்து துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்து அந்த இளைஞர்களை ஒப்படைத்துள்ளனர்.

சிறுமி மற்றும் அவரது பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் சந்தோஷ் மற்றும் சதீஷ் இருவரையும் போச்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

மற்ற செய்திகள்