நியூட்ரினோ, ஹைட்ரோகார்பன், 8 வழிச்சாலை விவகாரங்களில்... முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!.. சூழலியலார்கள் வரவேற்பு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிலுரை ஆற்றினார். அப்போது சூழலியல் சார்ந்த அவருடைய அறிவிப்புகள் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

நியூட்ரினோ, ஹைட்ரோகார்பன், 8 வழிச்சாலை விவகாரங்களில்... முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!.. சூழலியலார்கள் வரவேற்பு!

தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பேசுகையில், "நீதிக்கட்சியின் தொடர்ச்சி பேரறிஞர் அண்ணா, அண்ணாவின் தொடர்ச்சி கலைஞர், கலைஞரின் தொடர்ச்சி நான். அண்ணாவின் அரசியல் வாரிசு, கலைஞரின் கொள்கை வாரிசு நான். என் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி.

கொளத்தூர் தொகுதியில் வாக்களித்த வாக்காளர்களுக்கும், தோழமை கட்சிகளுக்கும் நன்றி.

பொறுத்தார் பூமியாழ்வார் என்பது பழமொழி, நாங்கள் பத்து ஆண்டுகள் பொறுத்திருந்து ஆட்சிக்கு வந்துள்ளோம். கொடுத்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம். துளி அளவும் சந்தேகம் வேண்டாம்.

இரு தினங்களாக தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் 22 பேர் விவாதத்தில் பங்கேற்றிருக்கிறார்கள். அவர்களின் கருத்தை நான் அறிவுரையாக எடுத்துக் கொள்கிறேன்.

5 ஆண்டு கால ஆட்சியில் செயல்படுத்தவுள்ளதை கவர்னர் உரையில் சொல்லி விட முடியாது; கவர்னர் உரை ஒரு டிரைலர் தான்.

தடுப்பூசி இல்லை, ஆக்சிஜன் இல்லை என்ற சூழலில் தான் ஆட்சிக்கு வந்தோம்; தற்போது இல்லை என்ற சூழலே இல்லாத நிலையை உருவாக்கியுள்ளோம்" என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது மக்களுக்காக குரல் கொடுத்த அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்பட்டுள்ளன. போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது.

மீத்தேன், நியூட்ரினோ, எட்டுவழிச் சாலை, கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்தின் போது போட்டப்பட்ட வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்படும்" என தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்