அரசு மரியாதையுடன் 'எழுத்தாளர்' கி.ரா அவர்களின் இறுதிச் சடங்கு நடைபெறும்...! - தமிழக முதல்வர் அறிவிப்பு...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கரிசல் இலக்கியத்தின் முன்னத்தி ஏர் கி.ராஜநாராயணன் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் நடத்தப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அரசு மரியாதையுடன் 'எழுத்தாளர்' கி.ரா அவர்களின் இறுதிச் சடங்கு நடைபெறும்...! - தமிழக முதல்வர் அறிவிப்பு...!

எழுத்தாளர் கி.ராஜநாராயணன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சுட்டுரையில் அவர் பதிவிட்டுள்ளதாவது,

கரிசல் குயில்' கி.ராஜநாராயணன் மறைவால் தமிழ்த்தாய் தன் அடையாளங்களுள் ஒன்றை இழந்து தேம்புகிறாள்!

கரிசல் இலக்கியமும், இந்த மண்ணும், தமிழும் உள்ளவரை அவரது புகழ் வாழும்!

கி.ராஜநாராயணனை இழந்து வாடும் குடும்பத்தினர் - வாசகர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல் மு.க.ஸ்டாலின் என்று பதிவிட்டுள்ளார்.

 

மற்ற செய்திகள்