'ஸ்கூல் பொண்ணு கூட காதல்'... 'திடீரென நடந்த பிரேக் அப்'... 'ஒண்ணும் புரியாமல் மாணவி வீட்டிற்கு போன இளைஞர்'... அரங்கேறிய கொடூரம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

காதலியைப் பார்க்கப் போன இளைஞர் காதலி வீட்டில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'ஸ்கூல் பொண்ணு கூட காதல்'... 'திடீரென நடந்த பிரேக் அப்'... 'ஒண்ணும் புரியாமல் மாணவி வீட்டிற்கு போன இளைஞர்'... அரங்கேறிய கொடூரம்!

சிதம்பரம் வ.உ.சி.தெருவைச் சேர்ந்தவர் அன்பழகன். இவருக்கும் சிதம்பரம் பகுதியைச் சேர்ந்த 10ம் வகுப்பு படிக்கும், 16 வயது மாணவிக்கும் காதல் மலர்ந்துள்ளது. இருவரும் ஒரு வருடங்களாகக் காதலித்து வந்தார்கள். இந்தச்சூழ்நிலையில் அன்பழகனின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்ட நிலையில், அது அந்த மாணவிக்குப் பிடிக்காமல் போய்விட்டது. இதையடுத்து இனிமேல் என்னுடன் பேச வேண்டாம் என, அன்பழகன் உடனான காதலை அந்த மாணவி துண்டித்துக் கொண்டார்.

இந்நிலையில்  அந்த மாணவியின் வீடு நேற்று திறந்து கிடந்துள்ளது. ஆனால் வீட்டில் யாரும் இல்லாத நிலையில், பக்கத்து வீட்டுக்காரர் வீட்டினுள் சென்று பார்த்துள்ளார். அப்போது அவர் கண்ட காட்சி அவரை அதிர்ச்சியில் உறையச் செய்துள்ளது. அந்த வீட்டில் உள்ள அறை ஒன்றில் இளைஞர் ஒருவர், கைகள் கட்டப்பட்ட நிலையில் பிணமாகக் கிடந்துள்ளார். மேலும் அவரது தலையின் பின்புறம் வெட்டுக் காயங்கள் இருந்தன. ஆனால் அந்த வீட்டில் மாணவியோ, அவரது குடும்பத்தினரோ யாரும் இல்லை.

இதையடுத்து சிதம்பரம் நகர போலீஸ் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டார்கள். அப்போது கொலை செய்யப்பட்டுக் கிடந்தது, அந்த மாணவியின் காதலன் அன்பழகன் எனத் தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் கூறும்போது, ''காதலி வீட்டில் அன்பழகன் மர்மமான முறையில் ரத்த காயங்களுடன் பிணமாகக் கிடந்துள்ளார். ஆனால் காதலியின் குடும்பத்தினர் தலைமறைவாகி உள்ளனர்.

தலைமறைவாக உள்ள காதலியின் குடும்பத்தைப் பிடித்து விசாரணை மேற்கொண்டால் தான் கொலைக்கான முழு காரணம் தெரியவரும். காதல் தகராறில் அன்பழகனைச் சிலர் அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு, பின்னர் அவரது உடலை வீட்டின் ஒரு அறையில் போட்டுவிட்டுச் சென்றிருப்பதாக, முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது என காவல்துறையினர் தெரிவித்துள்ளார்கள்.

மற்ற செய்திகள்