'கல்யாணம் ஆகி இத்தனை வருஷமா... எப்படி மறைச்சாரு'?.. கணவர் தலையில இருந்து டக்குன்னு விழுந்திருச்சு... மனைவி எடுத்த அதிரடி முடிவு!.. சென்னையில் பரபரப்பு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தலையில் விக் வைத்து ஏமாற்றி திருமணம் செய்த கணவர் மீது நடவடிக்கை எடுக்ககோரி மனைவி அளித்த புகாரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

'கல்யாணம் ஆகி இத்தனை வருஷமா... எப்படி மறைச்சாரு'?.. கணவர் தலையில இருந்து டக்குன்னு விழுந்திருச்சு... மனைவி எடுத்த அதிரடி முடிவு!.. சென்னையில் பரபரப்பு!

சென்னை ஆலப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர் (29). கடந்த 2015 ஆம் ஆண்டு மேட்ரிமோனி மூலம் ராஜசேகருக்கும் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது.

திருமணத்தின் போது வரதட்சணையாக 50 சவரன் நகை மற்றும் 2 லட்ச ரூபாய் பணத்தை பெண் வீட்டார் கொடுத்துள்ளனர்.

திருமணத்திற்கு பின்னர் பல வருடம் ராஜசேகரன் தனது மனைவியுடன் சேர்ந்து வாழ்வதில் ஈடுபாடு இல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

மனைவி வற்புறுத்தியதை அடுத்து ராஜசேகர் அவருடன் இணைந்து இருந்த போது தலையில் இருந்த விக் கழண்டு விழுந்தது. ராஜசேகர் தலையில் முடியில்லாமல் வழுக்கை தலையாக இருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து தலையில் முடி இருப்பது போல் விக் வைத்து கொண்டு மேட்ரிமோனியில் புகைப்படத்தை பதிவிட்டு ராஜசேகர் தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது.

மேலும், வரதட்சணையாக வந்த 58 சவரன் நகைகளை ராஜசேகர் செலவு செய்துவிட்டு வங்கியில் இருப்பதாக கூறி பொய்யாக கூறி வந்துள்ளார்.

இவை அனைத்தும் தனக்கு தெரிந்த உடன் ராஜசேகர் அடித்து துன்புறுத்துவதாக இளம்பெண் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 2015-ம் ஆண்டு புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் போலீசார் நேற்று 498(ஏ)- கணவர் மற்றும் கணவரின் குடும்பத்தினரால் பெண்ணிற்கு இழைக்கப்படும் கொடுமைகள், 406- நம்பிக்கை மோசடி ஆகிய பிரிவின் கீழ் ராஜசேகர், தாயார் ஜெகதா, தந்தை ஜெகநாதன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

மற்ற செய்திகள்