‘கொட்டித் தீர்க்கும் அடைமழை!’.. சென்னை ரயில் தண்டவாளத்தில் எழுந்த ‘புதிய சிக்கலால்’ பரபரப்பு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தென்மேற்கு வங்கக் கடலில் தீவிர புயலாக நிவர் புயல் உருவாகியிருப்பதன் காரணமாக, தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் காலை முதலே பலத்த காற்றுடன் கனமழை பொழிந்து வருகிறது.

‘கொட்டித் தீர்க்கும் அடைமழை!’.. சென்னை ரயில் தண்டவாளத்தில் எழுந்த ‘புதிய சிக்கலால்’ பரபரப்பு!

மேலும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் கனமழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. சென்னை வண்ணாரப்பேட்டை பென்சில் ஃபேக்டரி அருகே பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது.

இந்நிலையில் தொடர் மழைகாரணமாக பென்சில் ஃபேக்டரி அருகே உள்ள ரெயில்வே தண்டவாளம் திடீரென கீழே இறங்கியதாக கூறப்பட்டதை அடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.   இதனை கேள்விப்பட்டதும், சம்பவ இடத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்து, பாதிப்பை சரி செய்ய தீவிர நடவடிக்கை எடுக்க விரைந்துள்ளனர்.

மற்ற செய்திகள்