சென்னை திருவான்மியூர் ரயில் நிலையத்தில் ஷாக்..! துப்பாக்கியுடன் நுழைந்த கொள்ளையர்கள்.. என்ன நடந்தது..?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

திருவான்மியூர் ரயில் நிலையத்தில் உள்ள டிக்கெட் கவுண்டருக்குள் புகுந்து துப்பாக்கி முனையில் பணத்தை கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருவான்மியூர் ரயில் நிலையத்தில் ஷாக்..! துப்பாக்கியுடன் நுழைந்த கொள்ளையர்கள்.. என்ன நடந்தது..?

சென்னை திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையத்தில் டிக்கெட் கொடுப்பவராக டீக்காராம் மீனா என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் நேற்றிரவு வழக்கம்போல் ரயில் நிலையத்தில் பணியாற்றிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் மூன்று பேர், மீனாவை கட்டி போட்டுவிட்டு கவுண்டரில் இருந்த சுமார் 1 லட்சத்து 32 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்றதாக கூறப்படுகிறது.

Chennai Thiruvanmiyur railway station robbery at gunpoint

இதனை அடுத்து இன்று காலை வழக்கம் போல பயணிகள் டிக்கெட் எடுப்பதற்காக கவுண்டருக்கு சென்றுள்ளனர். ஆனால் நீண்ட நேரமாக டிக்கெட் கவுண்டரின் கதவு பூட்டப்பட்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த பயணிகள் உடனே ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

Chennai Thiruvanmiyur railway station robbery at gunpoint

தகவலறிந்து விரைந்து வந்த ரயில்வே போலீசார், வெளிப்புறமாக பூட்டப்பட்டிருந்த கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது டிக்கெட் கொடுப்பவரான டீக்காராம் மீனா, கைகள் கட்டப்பட்டு, வாயில் பிளாஸ்திரி ஒட்டப்பட்ட நிலையிலும் இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Chennai Thiruvanmiyur railway station robbery at gunpoint

இதனைத் தொடர்ந்து உடனடியாக அவரை மீட்ட போலீசார், கொள்ளை சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். அப்போது துப்பாக்கியுடன் வந்த மூன்று நபர்கள் தன்னை கட்டிப்போட்டு, டிக்கெட் கவுண்டரில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றதாக மீனா போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதனடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ரயில்வே நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர். துப்பாக்கி முனையில் ரயில் நிலையத்தில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ROBBERY, RAILWAY, CHENNAI, THIRUVANMIYUR RAILWAY STATION

மற்ற செய்திகள்