‘2 தடவை மாட்டல, அப்போ மறுபடியும் அதே மாதிரி போவோம்’.. சென்டிமென்ட்டால் சிக்கிய நபர்.. சென்னையில் நடந்த ருசிகரம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்டிமென்டாக போட்டுவந்த சட்டையால் செல்போன் திருடிய நபர் சிக்கிய சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.

‘2 தடவை மாட்டல, அப்போ மறுபடியும் அதே மாதிரி போவோம்’.. சென்டிமென்ட்டால் சிக்கிய நபர்.. சென்னையில் நடந்த ருசிகரம்..!

சென்னை மதுரவாயல் அடுத்த அஷ்டலட்சுமி நகர் பகுதியில் நேற்று முன்தினம் இரண்டு செல்போன் பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளது. இதுகுறித்த புகாரின் அடிப்படையில் மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து அந்த மர்மநபரை தேடி வந்தனர்.

இந்தநிலையில் அஷ்டலட்சுமி நகர் போலீஸ் பூத் அருகே போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது பைக்கில் வந்த நபரை மடக்கி விசாரித்தனர். அப்போது சிசிடிவி கேமரா காட்சியில் பதிவாகியிருந்த அதே நபர், அதே சட்டையுடன், அதே பைக்கில் வந்திருப்பதும் தெரியவந்தது.

இதனை அடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் போரூரை சேர்ந்த மோகன்(32) என்பது தெரியவந்துள்ளது. சரியான வேலை கிடைக்காததாலும், போதிய வருமானம் இல்லாததாலும் செல்போன் பறிப்பில் ஈடுபட்டது வந்ததாக போலீசாரிடம் மோகன் தெரிவித்துள்ளார். அதே பகுதியில் இரண்டு செல்போன் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டும் போலீசில் சிக்காததால், அந்த சென்டிமென்ட்டில் மீண்டும் அதே பகுதியில் அதே சட்டை அணிந்து அதே பைக்கில் வந்து வழிப்பறியில் ஈடுபட வந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து மோகனை கைது செய்த போலீசார், அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மற்ற செய்திகள்