Darbar USA

‘சென்னையில்’ வேலை முடிந்து வீடு திரும்பிய ‘ஐடி’ ஊழியருக்கு... கண் இமைக்கும் நேரத்தில் நேர்ந்த ‘துயரம்’...

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை மாதவரத்தில் ஐடி ஊழியர் ஒருவர் சாலை விபத்தில் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

‘சென்னையில்’ வேலை முடிந்து வீடு திரும்பிய ‘ஐடி’ ஊழியருக்கு... கண் இமைக்கும் நேரத்தில் நேர்ந்த ‘துயரம்’...

சென்னை ராயபுரம் போக்குவரத்து காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணி புரிந்து வருபவர் சங்கர். இவருடைய மகன் நிதிஷ்குமார் (21) அம்பத்தூரில் உள்ள ஐடி கம்பெனி ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று நள்ளிரவு வேலை முடிந்ததும் நிதிஷ்குமார் அவருடைய சக ஊழியர்களான அராஃபத் (21), சிவா (21) ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்துள்ளார்.

மாதவரம் கணக சத்திரம் அருகே போய்க்கொண்டிந்தபோது திடீரென லாரி ஒன்று அவர்களுடைய இருசக்கர வாகனத்தின்மீது மோதியுள்ளது. இதில் இருசக்கர வாகனத்தில் இருந்த 3 பேரும் நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைந்துள்ளனர். இதையடுத்து அருகிலிருந்தவர்கள் அவர்கள் 3 பேரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதில் நிதிஷ்குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். காயமடைந்த மற்ற 2 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள மாதவரம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

ACCIDENT, IT, TECHIE, POLICE, CHENNAI, FATHER, SON