“சாதிமறுப்பு திருமணம்... உடுமலை சங்கர் கொலை வழக்கு”.. சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய பரபரப்பு தீர்ப்பு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

திருப்பூர், உடுமலையை அடுத்த குமரலிங்கத்தைச் சேர்ந்த சங்கரும், திண்டுக்கல் மாவட்டம் பழநியைச் சேர்ந்த கவுசல்யாவும் கடந்த 2015-ஆம் ஆண்டு சாதிமறுப்பு திருமணம் செய்துகொண்டனர்.

“சாதிமறுப்பு திருமணம்... உடுமலை சங்கர் கொலை வழக்கு”.. சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய பரபரப்பு தீர்ப்பு!

அதன் பின்னர் கடந்த 2016-ஆம் ஆண்டு மார்ச் 13-ஆம் தேதி, தன் மனைவியுடன் வெளியில் சென்ற சங்கர், பட்டப்பகலில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். அதன் பின்னர் இவ்வழக்கில், கவுசல்யாவின் தாய் அன்னலட்சுமி உள்ளிட்ட 3 பேரை விடுதலை செய்தும், அதே சமயம் கவுசல்யாவின் தந்தை சின்னசாமி உள்ளிட்ட 6 பேருக்கு தூக்கு தண்டனையும் விதித்து திருப்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. 

இந்நிலையில், உடுமலைப் பேட்டையில் கொலை செய்யப்பட்ட பொறியாளர் சங்கர் வழக்கில் கவுசல்யாவின் தந்தை சின்னசாமியை விடுதலை செய்தும், இவ்வழக்கில் அவருடன் தொடர்புடைய மற்ற 5 பேரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்ததும் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. இந்த விடுதலையை எதிர்த்து காவல்துறை தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்