இனி ‘மதுபோதையில்’ வாகனம் ஓட்டினால் ‘கைது’... ‘சென்னை’ உயர்நீதிமன்றம் ‘அதிரடி’ உத்தரவு... ‘விவரங்கள்’ உள்ளே...

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மது போதையில் வாகனம் ஓட்டுபவர்களை கைது செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இனி ‘மதுபோதையில்’ வாகனம் ஓட்டினால் ‘கைது’... ‘சென்னை’ உயர்நீதிமன்றம் ‘அதிரடி’ உத்தரவு... ‘விவரங்கள்’ உள்ளே...

இதுதொடர்பான உயர்நீதிமன்றத்தின் உத்தரவில், “மது போதையில் வாகனம் ஓட்டுபவர்களை கைது செய்வதுடன், அவர்களின் லைசென்சையும் ரத்து செய்ய வேண்டும். மதுபோதையில் வாகனம் ஓட்டுவதை கண்காணிக்க போலீசார் தனிப்பிரிவை ஏற்படுத்த வேண்டும். கைது செய்யப்படுபவர்கள் குறித்த அறிக்கையை மாதந்தோறும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது. சாலை விபத்தில் காயமடைந்தவர் ஒருவர் கூடுதல் இழப்பீடு கேட்டு தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

MADRASHIGHCOURT, POLICE, CHENNAI, DRUNK, DRIVE, ARREST, LICENSE