பூட்டி இருந்த காதலி வீட்டின் கதவு.. உடைத்துக் கொண்டு போன காதலனுக்கு.. உள்ளே காத்திருந்த 'அதிர்ச்சி'

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை தாம்பரம் பகுதியை அடுத்த குரோம்பேட்டையில் வாடகை வீடு எடுத்து வசித்து வருபவர் பிரியதர்ஷினி.

பூட்டி இருந்த காதலி வீட்டின் கதவு.. உடைத்துக் கொண்டு போன காதலனுக்கு.. உள்ளே காத்திருந்த 'அதிர்ச்சி'

Also Read | "தர்மசங்கடம் வேணாம்".. கட்சியினருக்கு உதயநிதி கோரிக்கை.. அவரே வெளியிட்ட பரபரப்பு அறிக்கை.!

மதுரையை சேர்ந்த பிரியதர்ஷினி, சென்னை விமான நிலையத்தில் ஒப்பந்ததார அடிப்படையில், வரவேற்பாளராகவும் பணியாற்றி வந்துள்ளார்.

இதனிடையே, சமூக வலைத்தளம் மூலம் பழக்கமான லோகேஷ் என்ற இளைஞரை, பிரியதர்ஷினி காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

காதலி எடுத்த முடிவு

லோகேஷும் சென்னையைச் சேர்ந்தவர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இந்நிலையில் தான், காதலனை தன்னுடைய வீட்டிற்கு அழைத்துள்ளார் பிரியதர்ஷினி. ஆனால், அந்த நேரத்தில் தான் பிசியாக இருப்பதாக கூறி, காதலன் லோகேஷ் மொபைலை துண்டித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

இதனால், மீண்டும் அழைத்த பிரியதர்ஷினி, நீ வீட்டிற்கு வரவில்லை என்றால் நான் ஏதாவது செய்து விடுவேன் என்று கூறி விட்டு, விபரீத முடிவு எடுக்கப் போவது தொடர்பான சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் காதலன் லோகேஷிற்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. இதனைக் கண்டதும், பதறியடித்த லோகேஷ், உடனடியாக காதலியின் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார்.

chennai girlfriend decision after boyfriend did not speak

கதறித் துடித்த காதலன்

இதன் பின்னர், அவர் நீண்ட நேரமாக கதவினை தட்டி பார்த்துள்ளார். ஆனால், பிரியதர்ஷினி கதவை திறக்கவே இல்லை. நிறைய நேரமானதால், கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்துள்ளார் லோகேஷ். அங்கு, விபரீத முடிவை எடுத்துக் கொண்டு பிரியதர்ஷினி பரிதாபமான நிலையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. காதலியின் நிலையைக் கண்டதும் கதறித் துடித்துள்ளார் லோகேஷ்.

இதன் பின்னர், இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் தகவலறிந்து போலீசாருக்கும் இது பற்றி தெரிவித்துள்ளனர். உடனடியாக, அங்கு வந்த போலீசார், பிரியதர்ஷினியின் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, காதலன் லோகேஷிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிர் விலை மதிப்பற்றது. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

Also Read | கார்ல போறப்போ ரூபாய் நோட்டுகளை பறக்கவிட்ட ஆசாமி.. வைரலான வீடியோ.."தப்பு பண்ணலாம்னு நெனச்சா"..போலீஸ் போட்ட தெறி ட்வீட்...!

CHENNAI, GIRLFRIEND, BOYFRIEND, சென்னை, காதலி, காதலன்

மற்ற செய்திகள்